டாஸ்மாக் கடைகள் நாளைக்கு மூட வேண்டும்! மீறினால் நடவடிக்கை!

கே.ஏ.ஜெகதீஷ்வரி!
நாளைக்கு முப்பத்தியோரு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
மகாவீர் ஜெயந்தி அன்று வேலூரில் கள்ளத்தனமாக சரக்கு விற்றதைப்போல் அல்லாமல், தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்கண்ட இடங்களில் அம்மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை பின்பற்றுவார்கள் என நம்பப்படுகிறது.
அது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கவர்னகிரி கிராமம் வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் அவரது 252 வது பிறந்த தினவிழா ( 16.04.2022 ) அன்று கீழ்க்கண்ட அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் , மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றையதினம் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது.
மூடப்பட வேண்டிய மதுபானக் கடைகளின் விபரம்.
1) 10125 பசுவந்தனை ரோடு,பாண்டவர் மங்களம்.2) 9907 பண்ணை தோட்டம் தெரு,கோவில்பட்டி. 3)9922 இராமசாமி தியேட்டர் அருகில், கோவில்பட்டி. 4)9904. நெ820 ஏ. மெயின்ரோடு, பி.கே.ஆர். துரைராஜ் நாடார் , கோவில்பட்டி. 5)9919 பழனி ஆண்டவர்கோவில் தெரு , கோவில்பட்டி.
6 ) 10024 கனகராஜ் காம்ப்ளக் , சண்முகா தியேட்டர் அருகில் கோவில்பட்டி 7 ) 9908 கடலையூர் ரோடு , கோவில்பட்டி 8 ) 10020 மந்தித்தோப்பு ரோடு , கோவில்பட்டி 9 ) 9903 பாண்டவர்மங்களம் 10 ) 9909 ஏ.கே.எஸ். தியேட்டர் அருகில் , கோவில்பட்டி
11 ) 10010 ஆனந்தா லாட்ஜ் அருகில் , கோவில்பட்டி 12 ) 10016 லெட்சுமி மில் எதிர்புறம் , கோவில்பட்டி 13 ) 10022 ஆனந்தா லாட்ஜ் அருகில் , கோவில்பட்டி 14 ) 9924 கரடிகுளம் காலணி , கழுகுமலை . 15 ) 10138 சிவஞானபுரம் , எப்போதும்வென்றான்
16 ) 10009 தளவாய்புரம் . கயத்தார் மெயின்ரோடு 17 ) 9996 செட்டிக்குறிச்சி , கயத்தார் 18 ) 10046 செட்டிக்குறிச்சி , கயத்தார் 19)10028 அய்யனாருத்து 20 ) 9927 பனிக்கர்குளம் ரோடு , கயத்தார்.
21 ) 9926 கடம்பூர் , கயத்தார் 22 ) 10051 கழுகுமலை பஜார் 23 ) 10080 பன்னீர்குளம் ரோடு , கயத்தார் 24) 10036 ஓட்டப்பிடாரம் மெயின்ரோடு 25 ) 10041 புதூர்பாண்டியாபுரம், தூத்துக்குடி.
26 ) 10032 குறுக்குச்சாலை 27 ) 9906 பசுவந்தனையிலிருந்து கோவில்பட்டிக்குச்செல்லும் ரோடு . 28 ) 9923 கடம்பூர் , 29 ) 9917 2 : 296-1 , ராம் நகர் , புதியம்புத்தூர் , ஓட்டப்பிடாரம் 30 ) 10021 1 : 462 , குப்பனாபுரம் மெயின் ரோடு , பசுவந்தனை , ஓட்டப்பிடாரம் 31 ) 10047 1.73 ஜி , ஜம்புலிங்கபுரம் , ஓட்டப்பிடாரம்.
மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல் , மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் , சம்பந்நதப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
குறிப்பு:- நேற்று 14.04.2022 ஆம் தேதியன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக்கடைகள் திறக்கக்கூடாது என்று மாநிலம் முழுவதிலும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வேலூர் மாவட்டம், வேலூர் சேண்பாக்கம் இ.பி.அலுவலகம் அருகிலும், சிஎம்சி மருத்துவமனைக்கு எதிரில் பாபுராவ் தெருவில் உள்ள மோகன் என்கிற லாட்ஜிலும் பெட்டி பெட்டியாக டாஸ்மாக் சரக்கு பதுக்கிவைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
அதற்காக பென்னாத்தூர் மற்றும் மூஞ்சூர்பட்டு டாஸ்மாக் கடைகளிலிருந்து சரக்கு சப்ளை ஆனதாக தகவல்.
கடை நேரம் முடிந்த பின்னரும் திறந்து வைத்து இந்த கள்ளமார்க்கெட்டில் சரக்கு சப்ளை செய்தனராம்.
அதே போல் மகாவீர் ஜெயந்தி அன்று இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்கிற விதிமுறையும் மீறப்பட்டது.