போதை கும்பலின் பெண் தலைவி சிக்கினாள்!

ஆர்.ராஜேஷ்குமார்,
போதை மாத்திரைகளை சப்ளை செய்து வந்த பட்டதாரி பெண் இக்கூட்டத்தின் தலைவி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் போதை கும்பல் ஒன்று சமீபத்தில் சிக்கியது. அந்த கும்பலுக்கு விருதுநகரை சேர்ந்த பிபிஏ பட்டதாரியான (22) என்ற பெண்தான் இக்கூட்டத்தின் தலைவி என்பது தற்போது தெரியவந்துள்ளது.
விருதுநகரில் கல்வி படிப்பை முடித்த ராஜலட்சுமி சென்னைக்கு வந்து செல்போன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். மற்ற நேரங்களில் பப்ஜி விளையாடி வந்த ராஜலட்சுமிக்கு சென்னையை சேர்ந்த பூங்குன்றன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து ஆன்லைனில் பிசினஸ் செய்யலாம் என்ற நினைத்தபோது ராஜலட்சுமியின் ஹாஸ்டல் தோழி ஒருவர் கருகலைப்பு மாத்திரை வேண்டும் என ராஜலட்சுமியிடம் கேட்டுள்ளார்.
அதை ஆன்லைனில் தேடியபோதுதான் 'இந்தியா மார்ட்' என்னும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த டெல்லியை சேர்ந்த சச்சின் என்பவருடன் பழக்கமாகியுள்ளார்.
அவர் மூலமாக வாங்கிய கருக்கலைப்பு மாத்திரைகள் வெற்றிகரமாக வேலை செய்ததால் அடுத்தடுத்து மாத்திரைகளை பெண்கள் ஹாஸ்டல் பக்கமும், தோழிகள் வட்டாரத்திலும் சப்ளை செய்து அதிக லாபம் ஈட்ட தொடங்கினார்.
கருகலைப்பு மாத்திரைகளுடன், அசுர போதை, வலி நிவாரணி, நினைவாற்றல் பெறுக என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மாத்திரைகளை மொத்தமாக வாங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் விற்று வந்துள்ளார் ராஜலட்சுமி.
இது போல பல இடங்களுக்கு சப்ளை செய்து வர ஆள் தேவைப்பட்டதால் தனது காதலனான ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துபாண்டியை பிசினஸ் பார்ட்டனராக சேர்த்துக்கொண்டார். அதன் பின்னர் பூங்குன்றனும், கோகுலும் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் தான் போதை தடுப்பு பிரிவில் ஆறு பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற நடவடிக்கை எடுத்தனர்.
அத்துடன், அவர்களிடம் இருந்து 7,125 மாத்திரைகள், 9 செல்போன்கள், 2 லேப்டாப்கள், 1 ஐபேட், 3 பைக்குகள், ரொக்கம் ரூ.4,41,300 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பேசிய சென்னை கூடுதல் காவலர் ஆணையர் கண்ணன், கைதான ஆறு பேரும் மிடில் கிளாசில் இருந்து வந்தவர்கள். இதில் ஓர் படித்த பட்டதாரி பெண் ராஜலஷ்மி தலைவியாக செயல்பட்டு வந்தாள்.
அவளையும் கைது செய்துள்ளோம் என்றார்.