வலைதள காதலரை மீட்க போராடும் டுபாக்கூர் காதலிகள்!

முருகன்,
சோஷியல் மீடியா மூலம் இளைஞிகளை ஜொல்லு விட வைத்த வாலிபர் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார். அவருடன் இருந்தவர்களே அவரை போலிசிடம் போட்டுக் கொடுத்து சிக்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் அவனை விடுவிக்க வேண்டும் என்று இளம்பெண்கள் போலிசாரிடம் கெஞ்சி அழுது புரண்டுள்ளார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் பயாஸ். இவர் தனது நண்பன் ஐடியை வைத்து இஸ்ட்ராகிராம் கணக்கை துவங்கி அதன் மூலம் பல பெண்களுடம் தொடர்பு வைத்திருந்துள்ளார்.
சுமார்100க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி ஆபாசமாக பேசியும் பல லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார். பயாஸ்.
அவரது வலையில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா என்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளம் பெண்கள் சிக்கியிருக்கிறார்கள்.
அப்படி சிக்கியவர்களிடம், நண்பராக பழகியும், காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பணம் பறித்துள்ளார். குறிப்பாக செல்போன் மற்றும் மெடிக்கல் கடை நடத்தி வருகிறேன். அதற்கு பணம் தேவை வருகிறது எனக் கூறி பணம் பறித்துள்ளதாக ஆரணி போலிசாராரிடம் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி பல பெண்களிடம் ஆபாசமாக பேசும் ஆடியோ பதிவு செய்து கொண்டு மிரட்டி பணம் பறித்து, அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.
பயாசிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது அவரிடம் இரவு நேரங்களில் பேசக்கூடிய இளம்பெண்கள் சிலர் அவருக்கு போன் செய்து கொண்டே இருந்தனர். மேலும் சில பெண்கள் மெசேஜ் அனுப்பினர்.
இளம் பெண்களிடம் போலீசார் பயாசுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. அவர் ஒரு மோசடி நபர். அவரை நம்பி ஏமாற வேண்டாம். இனிமேல் இந்த எண்ணுக்கு போன் செய்யாதீர்கள் என அறிவுரை கூறினர்.
அப்போது சில பெண்கள் பயாஸ் மிகவும் நல்லவர். அவர் எங்களுக்கு வேண்டும் என கூறியுள்ளனர். இளம் பெண் ஒருவர் பயாஸ் எப்படிப்பட்டவராக இருந்தாலும் பரவாயில்லை. அவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த பிறகு நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் எனவும், மேலும் சில பெண்கள் பயாசைவிட்டு விடும்படியும் கெஞ்சினர் .
இதையெல்லாம் கேட்டு மிரண்டு போன போலிசார் தலையை பிய்த்துக் கொண்டதுதான் மிச்சம்.