கிறிஸ்டியன் என்று சொல்வதற்கே அசிங்கமாக இருக்கிறது! வேதனையில் கதறும் பெண்!!

 ம.பா.கெஜராஜ்,

 நான் கிறிஸ்டியன் என்று சொல்வதற்கே அசிங்கமாக இருக்கிறதுங்க என்று வேதனையில் கதறும் பெண்ணின் வீடியோ பார்ப்போரை கலங்க வைத்தது.  

 சென்னை, வளசரவாக்கம் பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் தீக்சித் அதே பள்ளியின் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தான்.

 இறந்த தீக்சித்துக்கு ஏழு வயதாகிறது. அவன் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர், பள்ளி வளாகத்தில் பேருந்தில் இருந்து இறங்கி நடந்துச்சென்ற போது பின்புறமாக இயக்கப்பட்ட பள்ளிப் பேருந்து சக்கரத்தில் சிக்கினார்.

 தலை பகுதியில் பலத்த காயமடைந்த சிறுவனை மீட்டு வடபழனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் பூங்காவனம் மற்றும் பெண் ஊழியர் ஞானசக்தி ஆகியோரை வளசரவாக்கம் போலீசார் கைது செய்தனர்.

  இந்த விபத்து குறித்த தகவலை ரொம்பவே தாமதமாக பெற்றோர்க்கு தெரிவித்துள்ளது பள்ளி நிர்வாகம்.

  அதன் பின்னர் ஆஸ்பத்திரிக்கு ஓடிச்சென்ற பெற்றோர் குழந்தை சடலமாக இருப்பதைக் கண்டு கதறி அழுதனர்.

  கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அந்த குடும்பத்தினர் சிறுவனை கிறிஸ்தவ கல்லரையில்  நல்லடக்கம் செய்ய வளசரவாக்கம் திருச்சபையினரை அனுகியிருக்கிறார்கள்.

  அப்போது அங்கு நீங்க மதுரை சி.எஸ்.ஐ, உங்களுக்கு இங்கு கல்லரை கொடுக்க முடியாது என்று திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.

 இதனால் மனமுடைந்த சிறுவனின் தாய் மீடியாக்கள் முன் கதறிவிட்டார். என் குழந்தைக்கு கிறிஸ்டியன் என்றால் ரொம்பவே பிடிக்கும். எங்க குடும்பத்தில் பல பேர் ஆயர்களாக (போதகர்களாக) இருக்கிறார்கள்.

 கல்லரையில் புதைக்க இடம் கேட்டால், சந்தா கட்டினீங்களா? மெம்பரா என்று கேள்வி கேட்பது தான் கிறிஸ்தவம் என்றால் அப்படிப்பட்ட கிறிஸ்தவமே எங்களுக்கு தேவையில்லை. இயேசு சாமி இதையெல்லாமா போதித்தார்.

 நாங்கள் கிறிஸ்டியன் என்று சொல்வதற்கே அசிங்கமாக இருக்கிறது. மதம் என்னங்க பெரிய மதம். மனிதாபிமானம் இல்லீங்களா என்று கதறினார்.

  இந்த வீடியோ அரசு வட்டாரத்தின் பார்வைக்கு சென்ற நிலையில், அரசு அதிகாரிகளின் ஏற்பாட்டின் பேரில் வளசரவாக்கம் கல்லரை தோட்டதிலேயே சிறுவனின் உடலை அடக்கம் செய்ய அவர்கள் ஏற்பாடு செய்தனர்.