அங்கன்வாடி இடத்தில், தனியார் கட்டிடம்! இரவில் கட்டப்பட்டதால் பரபரப்பு!

கு.அசோக்,
சோளிங்கர் அருகே அங்கன்வாடி மையம் கட்ட ஆய்வு செய்த இடத்தில் இரவோடு இரவாக தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டிவிட்டார். அதை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்
இராணிப்பேட்டைமாவட்டம், சோளிங்கர் அடுத்த சின்னப்பரவத்தூர் கிராமத்தில் முறையான அங்கன்வாடி மையம் அமைதத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது கட்ட பணி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த அங்கன்வாடி மையம் கட்ட அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள இடத்தை ஆய்வு செய்த நிலையில் தற்போது இரவோடு இரவாக தனிநபர் ஒருவர் அங்கன்வாடி மையம் கட்ட ஆய்வு செய்த இடத்தில் கட்டிடம் கட்டியுள்ளார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல தெரிவித்தும் இது வரை ஆக்கிரமிப்பாளர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர் இதனை தொடர்ந்து அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது இதில் 80 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இவர்களுகக்கான சமையல் செய்யும் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஆகவே இதற்கான புதிய கட்டிடம் வேண்டும்.
மாணவர்களுக்கான உள்ள கழிவறை சுகாதாரமான முறையில் தூய்மை செய்யப்படாத நிலையில் செடிகள் முளைத்து காணப்படுகின்றது.
இந்நிலையில் அவற்றையும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.