சினிமா பாணியில் செம்மரம் கடத்தல்காரர்கள் சுற்றிவளைப்பு:- தமிழக காட்டுக்குள் ஆந்திர போலிஸ்! வெட்டு குத்து மல்லுகட்டு!

சினிமா பாணியில் செம்மரம் கடத்தல்காரர்கள் சுற்றிவளைப்பு:- தமிழக காட்டுக்குள் ஆந்திர போலிஸ்! வெட்டு குத்து மல்லுகட்டு!

ம.பா.கெஜராஜ்,

 பிரபல செம்மரம் கடத்தல் தலைவர்களான ராஜ்குமார், பிரபு ஆகியோரை ஆநிரமாநில போலிசார் தமிழக காட்டுக்குள் சுற்றிவளைத்தனர். ஆனாலும் அவர்கள் தப்பிச்சென்று வெட்டு குத்தில் இறங்கி களேபரம் செய்து வருகிறார்கள்.     

சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் பற்றின விவரம் வருமாறு,

 திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், படவேடு ஊராட்சி, துரிஞ்சாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜ்குமார், பிரபு. இவர்கள் ஆந்திர மாநிலத்தில் தங்கி செம்மரம் வெட்டி கடத்தல் செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

  சமீபத்தில் இவர்கள் அமிர்தி வனப்பகுதியிலுள்ள இரும்புலி சென்று செம்மரம் கடத்த ஆட்கள் சேகரித்த போது, அங்கு ஆந்திர மாநில போசார் இவர்களை சுற்றிவளைத்தனர்.

 ஆனாலும் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடி விட்டார்கள்.

 அப்போது அங்கு அமர்த்திக்கு சுற்றுலா சென்றிருந்த பெருமாள் பேட்டையைச் சேர்ந்த வேலன் என்பவர் அங்கு இருந்தார் அவரிடம் விசாரித்த ஆந்திர போலீசார் ராஜ்குமார் மற்றும் பிரபு எங்கே என்று கேட்டார்கள் இவர் தெரியாது என்று கூறி விட்டு வந்து விட்டார்.

 ஆந்திரா போலீஸிடம் பேசிய காரணத்தினால் சந்தேகம் அடைந்த ராஜ்குமார் மற்றும் பிரபு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி படவேடு வீரர் கோவில் அருகே வந்தபோது வேலன் மற்றும் அவருடைய சித்தப்பா வேலு ஆகியோரை தாக்கினர்.

 இதனால் வேலன் மற்றும் வேலு உள்ளிட்டவர்களுக்கு மண்டையில் காயம் ஏற்பட்டது. அவர் தற்போது வேலூர் அடுக்குமாரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

  ஆனால் இதுவரை போலிசாரும் சரி வனத்துறையினரும் சரி கட்டத்தல் கும்பலின் தலைவர்களான ராஜ்குமார் மற்றும் பிரபு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

 இந்நிலையில் இந்த கடத்தல் கும்பல் மீண்டும் ஆந்திராவில் செம்மரம் வெட்ட அப்பாவி மலைவாழ் மக்களை திரட்டி வருகிறார்கள்.