அன்னபூரணி ஆன்ட்டியின் ஆதிபராசக்தி அவதாரம்!

அன்னபூரணி ஆன்ட்டியின் ஆதிபராசக்தி அவதாரம்!

  ம.பா.கெஜராஜ்,

  அடுத்தவள் கணவனை அபரித்த பெண்ணை, "சொல்வதெல்லாம் உண்மை" என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தொகுப்பாளர் கேள்விக் கனைகளால் கிழித்து தொங்கவிடுவார்.

  கஞ்சி கூட குடிச்சிட்டு இருந்திடலாம், அதுகூட இல்லாம இருக்கலாம், ஆனால் மானத்தோடு வாழனும் என்று கோபமாக சொல்வார். அந்த சொல் அனைத்தும் அன்னபூரணி என்கிற பெண்ணை நோக்கியே வீசப்பட்டது.

  அந்த அரங்கில் அன்னபூரணி தலையை தொங்க போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பார்.

  பிரபல பஞ்சாயத்து நிகழ்ச்சியில் சோக முகத்துடன் அரசு என்பவருடன் ஜோடியாக அமர்ந்துள்ளார் அன்னப்பூரணி. எதிர் வரிசையில் அரசின் மனைவி, அன்னப்பூரணியின் கணவர் அமர்ந்துள்ளார்கள். ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தை இருக்கும் அரசுக்கும், அன்னப்பூரணிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது தனியாக வசிப்பது வரை சென்றுள்ளது. அது இரு குடும்பத்திற்கு தெரிந்து பஞ்சாயத்தாகி இருக்கிறது. அன்னப்பூரணி - அரசு ஜோடி தங்களுக்கு விவாகரத்து தந்துவிடும் படி அந்நிகழ்ச்சியில் கேட்கின்றது.

  அதே அன்னபூரணி ஆன்ட்டி தற்போது ஆதிபராசக்தியாக மாறி பெரிய சிம்மாசனத்தில் அமர்ந்துக் கொண்டு அருள் வாக்கு என்கிற பெயரில் வசூல் வேட்டையை துவக்கியிருக்கிறார்.

 அவர் ஆதிபராசக்தியானதை அவர் தரப்பே அவரது பேஸ்புக்கில் பதிவிட்டார். தற்போது இந்த மேட்டர் இணையத்தில் டிரெண்ட் ஆகி நிக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

 குறிப்பாக 'அன்னப்பூரணி அரசு அம்மா' என்ற சமூக ஊடகப் பக்கங்களில் இது பற்றி வெளியாகிக் கொண்டிருந்தது.

 பட்டு புடவை, சினிமா பாணி மேக்கப், லிப்ஸ்டிக் சகிதம் அம்மன் போன்று காரிலிருந்து இறங்கி நடந்து வரும் அன்னபூரணியை பலர் மலர் தூவி அதன் மீது நடக்க வைத்து பில்டப் கொடுத்தனர்.

 இதனால் அவரை அம்மனாகவே நினைத்துக் கொண்டு தான் கூட்டி வந்த கூட்டத்திற்கு அருள்பாலிப்பது போல கை தூக்கி காட்சி தந்தபடி ஸ்லோமோஷனில் நடந்து வர கூடவே பாடல் கெட்டப் வேறு.

 இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள் அன்னபூரணி குறித்து வலைதளத்தை அலசியபோது தான் "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சியின் தொகுப்பு கிடைத்தது.

  அதை வைத்துத்தான் அன்னபூரணி ஆன்டியை கலாய்த்து வருகிறார்கள்.

  இந்த சங்கதியை ஊதி பெரிதாக்குவதே ஒரு சாமியார் அவதாரி தரப்புத்தானாம்.

  அது சரி ஒரு பிசினஸ்னா போட்டி இருக்கத்தானே செய்யும்.