காவலர்கள் 26 லட்சம் நிதி உதவி!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
தமிழக காவல்துறையில் 2013- ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள்
எதிர்பாராத விதமாக இறக்க நேரிடும் போது 2013-பேட்ச் காவலர்கள் உதவிகளை பகிர்ந்துக் கொள்கின்றனர்.
அந்த வகையில், மேற்படி பேட்ஜ் அனைவரும் சமூக வலைதளங்களாகிய வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மூலம் ஒன்றினைந்து ரூபாய் 26 லட்சம் நிதி திரட்டி அதனை சிலதினங்களுக்கு முன்னர் சாலை விபத்தில் உயிரிழந்த கரூர் மாவட்ட ஆயுதப் படையில் பணிபுரிந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த காவலர். மணிகண்டன் குடும்பத்திற்கு ரூபாய் 16 லட்சமும், தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த காவலர் மாரிச்சாமி அவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயும் காவலர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று கொடுக்கப்பட்டது.
உதவியை பெற்றுக்கொண்ட காவலரின் குடும்பங்கள் "எனது மகனுக்கு இறைவன் நல்ல ஆயுளை கொடுக்காவிட்டாலும் காவல்துறையில் நல்ல நண்பர்களை கொடுத்துள்ளான் எனவும் உதவி செய்த 2013 பேட்ச் காவலர்கள் அனைவருக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்கள்.