அம்பலமாகப்போகும் அ.தி.மு.க.அரசின் ஊழல்கள்!

ம.பா.கெஜராஜ்,
கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் முன்னறிவிப்பின்றி இரவோடு இரவாக செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால், தாம்பரம் முதல் அடையாறு கடலில் கலக்கும் முகத்துவாரம் வரை வெள்ள நீர் சென்னை முழுவதும் பாயுந்தது.
குறிப்பாக மழைக்காலத்தில் வடசென்னை பகுதியில் பெரம்பூர், ஜீவா நகர், கணேசபுரம், வியாசர்பாடி, பேசின்பிரிட்ஜ் பகுதிகளை வெள்ளம் சூழ்வது வழக்கமான ஒன்றுதான்.
இந்நிலையில் தான் 2015 மழையினால் மத்திய சென்னை, தென் சென்னை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மக்கள் இயல்பு வாழ்க்கைத் தொலைத்து,மொட்டை மாடிகளில் குடும்பம் நடத்தினர்.
இதன் காரணமாக சென்னை மக்களின் கோபம் ஆட்சியளர்கள் பக்கம் திரும்பியது.
அதனை தொடர்ந்து ஐந்தாயிரம் கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் அமைக்கப்போவதாக சென்னை மாநகராட்சி அறிவிததோடு பணிகளையும் துவக்கி போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தனர்.
காலப்போக்கில் மக்கள் அதை மறந்து விட்டனர்.
பின்னர், ஆறு ஆண்டுகள் கழித்து, தற்போது ஒட்டு மொத்த சென்னையையும் மீண்டும் தண்ணிரில் கலந்துவிட்டது.
290 இடங்களில் தேங்கிய வெள்ள நீரை, சுமார் 500 க்கும் மேற்பட்ட மின் மோட்டார் மூலம் வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்கள் களம் இறங்கினார்கள்.
இதில் வடபழனி, அசோக்நகர், தி.நகர், வேளச்சேரி பகுதிகளில் வெள்ள நீர் வெளியேற்றுவதில் சிரமங்கள் ஏற்பட்டன. இங்கெல்லாம் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது.
அதே போல் தற்போதைய ஆட்சியாளர்கள்,பருவ மழையை எதிர்நோக்கி கடந்த இரண்டு மாதங்களாக அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் நதிகளில் படர்ந்திருந்த ஆகாயத் தாமரைகளை அகற்றியதோடு, நதிகள் கடலில் கலக்கும் முகத்துவாரங்களில் தூர் வாரி சீர் படுத்தியதால் பெரும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சாலையை அகலப்படுத்துவது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த பொது நல வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதியரசர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அதில், 2015ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டதற்குப் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? சென்னையில் மழைநீர் தேங்கியது ஏன்? 2015ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டதற்கு பிறகும் மழைநீர் தேங்காமல் இருக்க என்னதான் செய்துகொண்டிருந்தீர்கள் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி தெரிவித்து சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
பாதி நாள் தண்ணீருக்காகவும், மீதி நாள் தண்ணீரிலும் மக்கள் தவிக்கின்றனர். மழை, வெள்ளம் அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்துள்ளது எனவும் கருத்து தெரிவித்துள்ளது நீதிமன்றம்.
ஒரு வாரத்துக்குள் கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் கூறியுள்ளது.
இல்லையெனில், உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் என்றும் கூறி, பொது நல வழக்கை ஒத்தி வைத்தது.
உயர்நீதிமன்றத்தின் இந்த கருத்தை மையமாககொண்டு தமிழக அரசு அ.தி.மு.க. ஆட்சியின் போது நடந்துள்ள முறைகேடுகளை தொகுத்து அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்பதில் அய்யமில்லை.
திமுக எதிர்கட்சியாக இருந்தபோதே ஆளும் கட்சினர் மீது குறிப்பாக மந்திரிகள் மீது ஆளுநரிடம் ஊழல் புகார் பட்டியலை அளித்து நடவடிக்கை கோரியது.
நீதிமன்றமே தகவல்களை கோரியிருக்கும் நிலையில் வீரமணி,தங்கமணி,வேலுமணி போன்ற குரூப்புகளின் தில்லாலங்கடிகள் மொத்தமாக அணிவகுக்கப்போகிறது.
மேலும் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் அரசியல்வாதிகளுக்கு எத்தனை சதவிகிதம் கமிஷன் என்பதும் வெளிச்சத்துக்கு வரும் என நம்பலாம்.
இந்நிலையில்தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
அதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரணைகமிஷன் நடத்தப்படும், அ.தி.மு.க. ஆட்சியில் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை முடக்க அவதுறு செய்கிறார்கள் என்று முன்னாள் முதலமைச்சர் பழனிச்சாமி பதிலளித்துள்ளார். மேலும் நாங்கள் கமிஷன் வாங்கியதை யாராவது பார்த்தார்களா என்று அதி புத்திசாலித்தனமாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசின் தொஇட்டமான ஸ்மார்ட் சிட்ட் திட்ட பணிகளில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ள உண்மைதான். நடந்துள்ள பணிகளும் முக்கால் பாகம் சரிவர செய்யப்படவில்லை என்று ஆங்கேங்கே பொதுமக்கள் தெரிவித்து வருகிறார்கள்.