இருளர் பிரிவினருக்கு வீட்டுமனைகள் வழங்குவதில் சிக்கல்!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த பங்களாமேடு பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்ப இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்கு ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளநிலையில் வீட்டுமனை மற்றும் பட்டா இல்லை.
இக்காரணத்தால் அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை வைத்திருந்தனர்.
இவர்கள் தங்கியிருக்கும் இடம் ரயில்வே பொறம்போக்கு இடமாக உள்ளது அதன் காரணமாக அந்தப் பகுதியில் மின்சார இணைப்பு கொடுக்க முடியவில்லை என வருவாய் துறை தரப்பில் கூறப்பட்டது.
இருப்பினும் இம்மக்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எலவம்பட்டி பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது.
ஆனால் அதிக தொலைவின் காரணமாக அங்கு செல்லாமல் இம்மக்கள் தவிர்த்து வந்தனர்.
எனவே தற்போது குமிடிக்கான்பட்டி சர்வே எண் 2ல் இருளர் இன 20 குடும்பத்தாருக்கு இடத்தை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.
அதனடிப்படையில் இன்று கும்மிடிக்கானாபட்டி கிராம நிர்வாக அலுவலர் இடத்தை தேர்வு செய்ய சென்ற போது, தங்களுடைய கிராமத்தில் இருளர்களுக்கான வீட்டுமனை வழங்க கூடாது என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் விவேகானந்தனை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஊராட்சி மன்ற தலைவர் கோடீஸ்வரன் தங்கள் பகுதியில் கண்டிப்பாக இருளார்களுக்கு வீட்டுமனை வழங்க கூடாது மீறி மாவட்ட நிர்வாகம் வீட்டுமனைப்பட்டா வழங்கினால் ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி சாலை மறியல் மட்டுமின்றி மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இச்சம்பவம் அறிந்து வந்த கந்திலி காவல்துறையினர் பொதுமக்களிடம் சமாதானம் பேசி தங்களுக்கு சாதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர் இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
சாதி பிரச்சனை ஒழிந்தபாடில்லை