லஞ்சம் பெற்ற ஆவின் அதிகாரி கைது!

கு.அசோக்,
5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆவின் உதவி பொதுமேலாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றிய அலுவலகம் (ஆவின்) குளிரூட்டும் நிலையத்துடன் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இதில் ஒப்பந்தாரராக இருப்பவர் ஜெகன் என்ற ஜெகதீசன், இவர் தனக்கு வர வேண்டிய பணத்திற்கு காசோலை வழங்க வேண்டுமென ஆவின் உதவி பொதுமேலாளர் மகேந்திரமால் என்பவரை அனுகினார்.
அவர் செக் கொடுப்பதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதுகுறித்து ஜெகன் வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்தார்.
அவர்களின் ஆலோசனையின்படி ரசாயணம் தடவிய ரூ.5 ஆயிரம் நோட்டுக்களை ஆவின் நிறுவனத்தில் மகேந்திரமாலிடம் ஜெகன் வழங்கினார் அப்போது அங்கு மறைந்திருந்த ஆய்வாளர் ரஜினி உள்ளிட்ட குழுவினர் கையும் களவுமாக அதிகாரி மகேந்திரமாலை கைது செய்தனர்.