நண்பனை கொன்றவர்கள் கைது!

நண்பனை கொன்றவர்கள் கைது!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,

மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சோழவந்தான் கரட்டுப்பட்டி யைச் சேர்ந்த சுந்தர பாண்டியன் மகன் ரோஷன் குமார் என்ற கோட்டைச்சாமி என்பவரை கொலை செய்து கிணற்றில் கல்லை கட்டிப்போட்ட வழக்கு சம்பந்தமாக எதிரிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி.பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

 அதனடிப்படையில் சோழவந்தான் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. சிவபாலன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

 தனிப்படையினரின் தீவிர விசாரணையில் வழக்கில் சம்பந்தப்பட்ட சோழவந்தான் கரட்டுபட்டியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகன் சுபாஷ், ஆண்டிச்சாமி மகன் ஜெயசூர்யா, நாச்சிகுளம் மாரியப்பன் மகன் பூவேந்திரன், கரட்டுப்பட்டி முருகன் மகன் சிவா ஆகிய நான்கு எதிரிகளை இன்று கைது செய்தனர்.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் கொலையுண்டு இறந்துபோன நபரின் கூட்டாளிகள் என்பது விசாரணையில் தெரிய வருகிறது.

 இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் அவர்கள் பாராட்டினார்கள்.