பிரியாணி பிரியர்களே உஷார்! ஆயிலுக்கு பதில் கொழுப்பு!!

பிரியாணி பிரியர்களே உஷார்! ஆயிலுக்கு பதில் கொழுப்பு!!

   ம.பா.கெஜராஜ்,

  பிரியாணியில், ஆயிலுக்கு பதில் கொழுப்பு போட்டு தயாரிப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் பிரியாணிக்கு மிகவும் பெயர் பெற்றது என்பதை அறிவோம்.

 குறிப்பாக ஆம்பூர், வாணியம்பாடி,திருப்பத்தூர், வேலூர் என ஆயிரக்கணக்கான பிரியாணி ஸ்பெஷல் கடைகள் உள்ளன.

  இவற்றில் வாரத்தில் ஒருநாள் பிரியாணிக் கடையும் உண்டு, சந்தைக்கறி பிரியாணியும் இருக்கிறது.

 இப்படிப்பட்ட ஓட்டல்களில் வெள்ளாட்டுக்கிடா மற்றும் நாட்டுக்கோழி பிரியாணி விற்கிறார்கள்.

 சில இடங்களில் மாட்டிறைச்சி கடைகளும் உண்டு.

 இது போன்ற பிரியாணிகடைகளுக்கு இடையே சில கலப்பட பிரியாணி கடைகளும் கடைவிரித்து பலரை நோயாளிகளாக்கி வருகிறார்கள்.

 தற்போது சமையல் எண்ணெயின் விலை அதிகம் என்பதால் பல பிரியாணிகடைகளில் ஆயிலுக்கு பதில்  மாட்டுக் கொழுப்பை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இப்படி கொழுப்பை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பிரியாணியை தொடர்ந்து உட்கொண்டால் மாரடைப்பு போன்ற உயிர்கொல்லி நோய் வரும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 இந்நிலையில், வேலூர் மக்கான் சிக்னல் அருகேயுள்ள "ஜாப் பிரியாணி" என்கிற கடையில் இப்படித்தான் பிரியாணி தயாரிக்கப்படுகிறதாம்.

 இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு புகார்கள் பறந்து கொண்டிருக்கிறதாம்.

 அந்த வகையில் திருப்பத்தூரைச் சேர்ந்த ஒருவர் மேற்படி அலுவருக்கு புகார் அனுப்பிவைத்துள்ளார்.

   அந்த புகாரின் விவரம் வருமாறு,

  உணவு பாதுகாப்பு அலுவலர் அவர்களுக்கு வணக்கம்,

   திருப்பத்தூரை சேர்ந்த ஆசிம் என்பவர் அவருடைய நண்பர்களுடன் இன்று (08.11.2021) பிற்பகல் வேலூர் மக்கான் சர்க்கிளில் உள்ள ஜாப் பிரியாணி என்கின்ற பிரியாணி கடையில் உணவருந்த சென்றார்.

  அப்போது ஆயில் அதிகமாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

அதற்கு பதிலளித்த உணவகத்தில் இருந்த பணியாளர்கள், சார் இது ஆயில் இல்லைங்க, மாட்டுக் கொழுப்பு சார் என்று சொல்லி அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்கள்.   

  அதுமட்டுமின்றி விலையும் உச்சத்தில் இருக்கிறது.

மேலும் கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு உள்ளிட்டவைகளை அப்படியே ரோட்டில் வைத்தே சமையல் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

 இதில் அவர்கள் பயன்படுத்துவது வீட்டுக்கு பயன்படுத்தப்படும் சமையல் சிலிண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட ஜாப் பிரியாணி கடையில் அதை நடத்துவதற்காக,எந்தவித அனுமதியும் பெறவில்லை.

மேலும் உணவு தயாரிப்பு விஷயத்தில் சிறிதளவும் சுத்தம் சுகாதாரத்தை கடைபிடிப்பதில்லை.

   இது குறித்தும், விலைப்புள்ளி பட்டியல் வைக்காதது குறித்தும் தகுந்த நடவடிக்கை எடுத்து அவர்களை, அவர்கள் திருத்திக் கொள்ளும் வரை, (சுத்தம் சுகாதாரத்துடன் தயாரிப்பது, கொழுப்புபோட்டு தயாரிக்காமல் ஆயில் ஊற்றி தயாரிப்பது, அதற்காக உரிய அனுமதி பெறுவது) கடையை திறக்க தடை விதிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம், நன்றி என அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

 இந்த புகாரைப் பற்றி அறிந்த சம்மந்தப்பட்ட அலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரித்துள்ளார்.

 இது குறித்து பிரபல செக்ஸாலஜி டாக்டர் அறிவன்பன் அவர்களிடம் பேசினோம்,

 ஆயிலுக்கு பதில் கொழுப்பை பயன்படுத்தி தயாரித்த பிரியாணியை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் நாளடைவில் அது உயிருக்கே கேடுவிளைவிக்கும்.

 ரத்தக் கொதிப்பு எனப்படும் பிபி அதிகரிக்கும், எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்பு அதிக அளவில் உடலில் சேரும், வி.எல்.டி.எல் எனப்படும் வெரி லோ டென்சிட்டிவ் புரோட்டின் பிரச்சனை ஏற்படும்.இதனால் நாள்பட்ட ரத்தகுழாய் அடைப்புகள் உண்டாகி மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

 குறிப்பாக ஆண் பெண் உறவே இதனால் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளது என்று சொன்னார்.

  பிரியாணி தயாரிப்பு எப்படி இருந்தால் நலம் என்பது குறித்து பிரபல பிரியாணி தயாரிப்பாளர் பிலால் என்பவரிடம் பேசினோம்.

 பிரியாணி இப்படித்தான் செய்ய வேண்டும்

 

ஒரு கிலோ இறைச்சி மற்றும் ஒரு கிலோ அரிசி கொண்டு பிரியாணி செய்யும் முறை

 

 

தேவையான பொருட்கள்

 

  1. சீரக சம்பா அரிசி 1 கிலோ

 

  1. இறைச்சி 1. கிலோ (சிக்கன்)

 

  1. கடலை எண்ணெய் 1/4. கிலோ

 

  1. ஏலக்காய்,பட்டை, லவங்கம் 10. ரூபாய்க்கு  

 

  1. இஞ்சி பூண்டு விழுது 100 + 100 - 200 கிராம்.

 

  1. வெங்காயம் 6 - எண்ணிக்கை (மீடியம்)

 

  1. மிளகாய் தூள் 2 -டீ ஸ்பூன்

 

  1. தக்காளி ஆறு தக்காளி (மீடியம்)

 

  1. உப்பு தேவையான அளவு.

 

  1. தண்ணிர் சீரக சம்பாவுக்கு 1-1/4 டம்ப்ளர்.

அதே புல்லட் அரிசி எனில் 1-3/4 டம்பளர் தண்ணிர் ஊற்றவும்.                           

 

  1. பச்சை மிளகாய் நான்கை கீறி போடவும்.

 

  1. புதினா கொத்தமல்லி கால் கட்டுக்கு சற்று அதிகம்.

 

  1. தயிர் அரை லிட்டருக்கு சற்று குறைவாக.
  2. பாத்திரம் இரண்டு கிலோ சாப்பாடு செய்கின்ற அளவு

 

செய்முறை

 

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். அடுத்து பட்டை லவங்கம் ஏலக்காய் அதில் போட்டு பொன் முறுவலகா வறுக்க வேண்டும் (கண்டிப்பாக கருக விடக்கூடாது). வறுத்தவுடன் அதில் நறுக்கிவைத்த வெங்காயத்தை போடு ரோஸ்ட் ஆகும்வரை நன்றாக வதக்கவும். அடுத்து இஞ்சி பூண்டு விழுது போட்டு ஜல்லிக்கரண்டியில் புரட்டிக் கொண்டே இருக்கவும். இடையே புதினா கொத்தமல்லி தக்காளி மற்றும் தயிர் ஆகியவற்றை போட்டு பச்சை வாசனை போகும் வரை புரட்டிக் கொண்டே இருக்கவேண்டும்.

 அடுத்ததாக சுத்தம் செய்து வைத்திருக்கும் கறி மற்றும் கைபிடி அளவு உப்பு ஆகியவற்றை போற்று கலக்கிக் கொடுக்க வேண்டும். கறி வெந்த பின்னர் தண்ணிர் ஊற்ற வேண்டும். தண்ணிர் கொதி வந்தவுடன் ஒரு டீ ஸ்பூன் தண்ணிர் எடுத்து அதில் உப்பு காரம் சரியாக உள்ளதா என்று பார்க்கலாம். சரியாக இருந்தால் அதில் அரிசி போட்டு கலக்கிவிட்டு மூடிவிட்டு கேஸ் அடுப்பை சிலிம்மில் வைத்து கால் மணி நேரம் வேக வைத்து பின்னர் திறந்து பார்க்கலாம்.

  வெந்துள்ளதா தண்ணிர் சுண்டியிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு எல்லாமே சரியாக வந்தவுடன், மூடி மீது பத்து நிமிடம் வெயிட்டை வைத்து அப்படியே மூடியிருக்க வேண்டும்.

அதன் பின்னர் பாத்திரத்தை இறக்கி சூடான மற்றும் சுவையான பிரியாணியை பரிமாறி சாப்பிடலாம்.

 ஆட்டுக்கறி என்றால், முன்னதாக குக்கரில் ஐந்து விசில் வரும்வரை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். அதில் வரும் சூப்பு நீரையே பிரியாணி செய்ய பயன்படுத்தலாம்.

 கண்டிப்பாக கலர் பவுடர் நெய் போன்றவற்றை பயன்படுத்தவே வேண்டாம்.