'ஹலால்' கோஷம் எழுப்பிய கேரள பெண் தொழிலதிபர் துஷாரா கைது!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
'ஹலால்' உணவு கோஷம் எழுப்பிய கேரள பெண் தொழிலதிபர் துஷாரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 24 அன்று, கொச்சியில் உள்ள துஷாரா அஜித்தின் 'ஹலால் அல்லாத உணவகத்திற்கு' வெளியே, ஏற்பட்ட கைகலப்பு தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேராள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் 'ஹலால் அல்லாத' உணவகத்திற்கு பெயர் பெற்ற கேரள தொழிலதிபர் துஷாரா அஜித் மற்றும் அவரது கணவர் நவம்பர் 2 செவ்வாய்க்கிழமை, கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சாட் ஸ்டாண்ட் வைப்பது தொடர்பாக அவருக்கும் வளாகத்தில் உள்ள மற்ற கடை உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பான வழக்கு இது.
துஷாரா மற்றும் அவரது கணவருடன் மேலும் இரண்டு கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் துஷாரா மீது வெறுப்புணர்வை பரப்பியதாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கொச்சியின் காக்கநாட்டில் ஹலால் அல்லாத உணவகத்தைத் தொடங்கியதற்காகவும், பன்றி இறைச்சியை வழங்கியதற்காகவும், ஜிஹாதிகளால் தாக்கப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டுகளை துஷாரா சமீபத்தில் வெளியிட்டார்.
காவல்துறை தனக்கு எதிராக இருப்பதாகவும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த போலீசார், இந்த வழக்கில் எந்த வகுப்புவாத கோணமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினர்.
"அக்டோபர் 24 ஆம் தேதியே, கைகலப்பு நடந்த உடனேயே, வழக்கு பதிவு செய்யப்பட்டது. நான்கு பேர் - துஷாரா, அஜித், சுனில் மற்றும் வினூப் அல்லது அப்பு - கைது செய்யப்பட்டுள்ளனர்;
அவர்கள் சம்பவம் நடந்தது முதல் தலைமறைவாக இருந்தனர். அவர்கள் கொலை முயற்சி குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று "இன்போபார்க் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் கூறினார்.
துஷாரா ஆறு மாதங்களுக்கு முன்பு தனது 'ஹலால் அல்லாத' உணவகத்தின் இரண்டாவது கிளைக்காக கொச்சி கட்டிடத்தில் இடத்தை வாடகைக்கு எடுத்திருந்தார். ஆனால், யார் எந்த இடத்தில் போர்டு வைக்க பயன்படுத்தலாம் என்பதில் பிரச்சனை இருந்து வந்தது.
துஷாரா உணவகத்திற்கு வெளியே அமைக்க விரும்பிய சாட் ஸ்டாண்டினால் மற்றொரு கடையின் உரிமையாளரான நகுல் என்பவருக்குமிடையேயும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
கைகலப்பைத் தொடர்ந்து, நகுல் மற்றும் மற்ற கடை உரிமையாளர், பெனோய் ஆகியோர் கால்களில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தப் பிரச்சினையில் இரண்டு வழக்குகளை போலீஸார் பதிவு செய்தனர், ஒன்று துஷாரா, அவரது கணவர் மற்றும் இரண்டு கூட்டாளிகள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326 (அபாயகரமான ஆயுதங்களால் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) கீழ்; மற்றொன்று பெனாய் மற்றும் நகுலுக்கு எதிராக, அவர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக துஷாராவின் எதிர் புகாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் - முற்றிலும் சிவில் நிகழ்வு - சில உள்ளூர் ஊடகங்கள் மற்றும் கேரளாவில் உள்ள பாஜக உட்பட பலரால் தவறாகப் புகாரளிக்கப்பட்டது, அவர்கள் பிரச்சினைக்கு வகுப்புவாத திருப்பத்தை சேர்த்தனர்.
பிஜேபி தலைவர்கள், சங்பரிவார் அனுதாபிகள் மற்றும் சில அடிப்படை கிறிஸ்தவ குழுக்கள், சமூக ஊடகங்களில் 'ஹலால் உணவு மூலம் ஜிகாதி படையெடுப்பு' பற்றி பல வகுப்புவாத வண்ண கருத்துக்களை வெளியிட்டனர். ஆனால், இந்த வழக்கில் அப்படியொரு கோணம் இல்லை என்பதை போலீஸார் உறுதி செய்தனர்.
ஹலால் என்றால் என்ன? இறைச்சிக்காக ஆடு மாடு கோழி ஒட்டகங்களை அறுக்கும் போது இஸ்லாமியர்கள் அதன் வாயில் சிறிது தண்ணிர் ஊற்றி பிஸ்மில்லா சொல்லுவார்கள். அதன் பெயரே ஹலால் ஆகும்.