கோர்ட் ஊழியரிடம் ஏடிஎம் கொள்ளை!

கோர்ட் ஊழியரிடம் ஏடிஎம் கொள்ளை!

கு.அசோக்,

 வாணியம்பாடியில் ஏ.டி.எம் மையத்தில் நீதிமன்ற ஊழியரிடம் உதவி செய்வது போல் நடித்து பணத்தை கொள்ளையடித்த  மூன்று  பேர் கைது.- சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலிசார் நடவடிக்கை.

  திருப்பத்தூர்மாவட்டம்,வாணியம்பாடி சி.எல் சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம் மையத்தில் கடந்த 2ம் தேதி வாணியம்பாடி சார்பு  நீதிமன்ற ஊழியர்  ரங்கநாதன் (55) என்பவர் பணம் எடுக்க சென்றுள்ளார்.

   அப்பொழுது ராஜ்குமார் என்பவர் ரங்கநாதனுக்கு உதவி செய்வது போல் நடித்து ஏ.டி.எம் கார்டை  மாற்றி கொடுத்து சென்றுள்ளார்.

  பின்னர் ரங்கநாதனின் ஏடிஎம்  கார்டினை  பயன்படுத்தி ரூ.23 ஆயிரம் பணம் எடுத்தாக குறுஞ்செய்தி வந்ததை கண்டு தனது ஏ.டி.எம் கார்டை பார்த்த போது தான் எமாற்றபட்டது தெரிய வந்தது.

  பின்னர் அதனை அறிந்த  ரங்கநாதன் சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  புகாரின் பேரில்  நகர  காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து ஏடிஎம் மையத்தில் இருந்த  சிசி டிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

 அதில், உதயேந்திரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார், இளைய நகரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார், தேவமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபு ஆகிய மூன்று பேரும் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

   அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம் , 5 ஏ.டி.எம் கார்டுகள், மற்றும் ரூ.9500 பறிமுதல் ஆகியவற்றை பறிமுதல்  செய்த வாணியம்பாடி நகர  போலிசார் அவர்கள் மீது வழக்கு பதிவு நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.