துப்பாக்கியால் சுட வேண்டாம்! செருப்பால் அடி - பா.ஜ.க., எம்.எல்.ஏ.அடாவடி பேச்சு!!

ரவிஜார்ஜ்,

 துப்பாக்கியால் சுட வேண்டாம்! செருப்பால் அடியுங்கள் என்று பா.ஜ.க., எம்.எல்.ஏ.அடாவடி பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

  அடுத்த மாதம் உத்தரபிரதேசத்தில்  சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் காணொலி மூலம் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.   அப்படியிருக்க கான்பூர் பாஜக எம்.எல்.ஏ மகேஷ் திரிவேதி, கித்வாய் நகர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 காட்டமாக பேசிய அவர், தேர்தல் நேரத்தில் கொடுங்கோலர்கள், ஒருபுறம் பேசுபவர்கள், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவார்கள்.

 அப்படிப்பட்டவர்களைக் கண்டால், சுட வேண்டாம் மாறாக தடி மற்றும் செருப்பால் அடியுங்கள்.

 என்னை பொறுத்தவரை  நான் எல்லாவற்றையும் கையாள்வேன் என்றார்.

அவரது பேச்சை பொதுமக்கள் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவரது இந்த அடாவடி பேச்சை ஆதரவாளர் ஒருவர் முகநூலில் நேரலையாக ஒளிபரப்பினார்.

  இது தற்போது வைரலாகி வருகிறது.

  இந்த பேச்சானது, அந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளரை தாக்கி, பாஜக எம்.எல்.ஏ மகேஷ் திரிவேதி பேசியதாக கூறப்படுகிறது.

மேற்படி அவரது பேச்சிற்கு சமாஜ்வாடி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 பாஜகவின் உண்மையான முகமும் குணமும் இதுதான். இது குறித்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம் என்று அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. 

  இந்நிலையில் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்த வீடியோவை கான்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் நேஹா ஷர்மா ஆய்வு செய்துள்ளாராம்.