மஞ்சள் நீராட்டு விழாவில் மின்சாரம் தாக்கி விபத்து!

மஞ்சள் நீராட்டு விழாவில் மின்சாரம் தாக்கி விபத்து!

 கு.அசோக்,

ஆம்பூர் அருகே இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் பேத்தியின் மஞ்சள் நீராட்டு விழாவில் மின்சாரம் தாக்கி பாட்டி உயிரிழப்பு-உமராபாத் காவல்துறையினர் விசாரணை,

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னபள்ளி குப்பம் பகுதியில் இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜானகி (60) இவரது மகள் வழி பேத்தியிற்கு நேற்று இரவு மஞ்சள் நீராட்டு விழா வீட்டில் நடைப்பெற்றது.

 இந்நிலையில் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக போடப்பட்ட பந்தலில் இருந்த இரும்பு கம்பிகளில் மின்சாரம் பாய்ந்துள்ளது.     இதை அறியாமல் இரும்பு கம்பியை பிடித்த மூதாட்டி ஜானகி மீது  மின்சாரம் பாய்ந்தது.

 இந்நிலையில் மூதாட்டியை காப்பற்ற சென்ற ஸ்ரீதரன் (25) என்பவர் மீதும் மின்சாரம் பாய்ந்த நிலையில் மூதாட்டி ஜானகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 தீக்காயங்களுடன் ஸ்ரீதரனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 பின்னர் இதுகுறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்  பேத்தியின் மஞ்சள் நீராட்டு விழாவில் பாட்டி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.