கொட்டும் மழையில் ஒலிம்பியாட் விழிப்புனர்வு! ஆர்வத்துடன் ரசித்த ஆட்சியர்!!

கொட்டும் மழையில் ஒலிம்பியாட் விழிப்புனர்வு! ஆர்வத்துடன் ரசித்த ஆட்சியர்!!

கொட்டும் மழையில் ஒலிம்பியாட் விழிப்புனர்வு! ஆர்வத்துடன் ரசித்த ஆட்சியர்!!

G.K.Sekaran,

வேலூர் மாவட்டம் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்  சென்னையில் ஜூலை -28 முதல் ஆகஸ்ட் -10ம் தேதி

 வரை நடைபெறவுள்ளஊ. அதையொட்டி, வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கோட்டை மைதானத்திலிருந்து விழிப்புணர்வு பேரணியில் ஒலிம்பியாட் ஜோதியை  மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப.,அவர்கள்  துவக்கி வைத்தார்.

 இதனைத் தொடர்ந்து கொட்டும் மழையில் மாணவர்கள் சிலம்பாட்ட விளையாட்டுகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்  ஆர்வமுடன் பார்வையிட்டார்.

 மேலும், இந்த விழிப்புணர்வு பேரணியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சார்பாக அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டது. அந்த காட்சிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

இந்நிகழ்வின் போது வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.இராமமூர்த்தி, பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாநகராட்சி ஊழியர்கள், மற்றும் ரோட்டரி, லயன்ஸ் கிளப், என்.சி.சி, என்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,வேலூர் மாவட்டம்.