சிறைவாசிகளுக்காக 1,78,000 மதிப்புள்ள 1690 புத்தகங்கள் தானம்!

சிறைவாசிகளுக்காக 1,78,000 மதிப்புள்ள 1690 புத்தகங்கள் தானம்!

 ர.நி.ஆனந்தன்,

திருப்பத்தூர் மாவட்டம் தூய நெஞ்சக் கல்லூரியில் 28.1.2023 சனிக்கிழமை முதல் 5.2.2023 ஞாயிற்றுக்கிழமை வரை, ஒன்பது  தினங்கள் நடைபெற்ற இரண்டாவது   இலக்கிய விழா மற்றும் புத்தக திருவிழாவின் நிறைவு தினத்தில் காவல் துறை இயக்குநர் மற்றும் சிறைத் துறை தலைவர் திரு.அம்ரேஷ் புஜாரிஅவர்களின் ஆணைக்கிணங்க

வேலூர் சரக சிறைத் துறை துணைத் தலைவர் திரு. செந்தாமரை கண்ணன் மற்றும் வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு. அப்துல் ரகுமான்ஆகியோரின் உத்தரவின் பேரில் வேலூர் மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் கிளைச் சிறைகள் மூலம் திருப்பத்தூர் கிளைச் சிறை கண்காணிப்பாளர் திரு. சுப்பையா சாமி மற்றும் வாணியம்பாடி கிளைச் சிறை கண்காணிப்பாளர் திரு.சு.தனவேல் முருகன் முன்னிலையில் திருப்பத்தூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில அரங்க எண் 104 அமைக்கப்பட்ட கூண்டுக்குள் வானம் அரங்கில் சிறையில் சிறைவாசிகளின் மனமாற்றத்திற்காக சிறை நூலகம் அமைப்பதற்காக புத்தக தானம் பெறப்பட்டது.

   இதில் திரளான பொது மக்கள் மற்றும் குனிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை மஞ்சளா மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகள், தூய நெஞ்சக கல்லூரி , மாருதி கேசரி ஜெயின் பெண்கள் கல்லூரி, இமயம் பெண்கள் கல்லூரி முதல்வர், கணேஷமால் பொதிகை கல்லூரி நிறுவனர், பேராசிரியர்கள் மாணவ மாணவிகள்  அரசு அலுவலர்கள் மற்றும் பெரியார் புத்தக கடை சார்பில் திரு.எழிலரசன் தி.க நகர மன்ற தலைவர் திரு.புகழேந்தி தி.க, திரு.முருகன் தி.க, படித்துறை புத்தக கடை திரு.பாரி ஆகியோர் வருகை தந்து பார்வையிட்டு ரூபாய் 1,78,000 மதிப்புள்ள 1690 புத்தகங்களை சிறைவாசிகளுக்காக புத்தக தானம் செய்துள்ளார்கள்.

  இவ்வளவு  புத்தகங்கள் தானமாக பெற உதவிய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு.அமர்குஷ்வாகா இ.ஆ.ப  மாவட்ட நிர்வாகம், உடன் இணைந்து உதவிய சிறை பணியாளர்கள் திரு. செந்தில் குமார் ஆசிரியர் மத்திய சிறை வேலூர், காவலர்கள் திரு. வெற்றி வேல் மு.த.கா, திரு.சிவசங்கர் மு.நி.கா , திரு.சிவா, திரு.தமிழ்செல்வன், திரு.ராம்கி, திரு.கௌதம், திரு.அகத்தியன், திரு.அத்திஸ்குமார், திரு.பிரசாந்த்,திரு.விக்னேஷ், திரு.முல்லை வேந்தன்,  திரு.தேவராஜ், திரு.தினகரன்,திரு.கார்த்திக்,திரு விக்னேஸ் ஆகிய பணியாளர்களுக்குதமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பில் திருப்பத்தூர் கிளைச் சிறை கண்காணிப்பாளர் திரு. சுப்பையா சாமி மற்றும் வாணியம்பாடி கிளைச் சிறை கண்காணிப்பாளர் திரு.சு.தனவேல் முருகன் ஆகியோர் தங்களது நெஞ்சம் கனிந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.