மின்வாரிய அலுவலகத்தில் சரக்கடிக்கிறாங்கப்பா!

ஆர்.மதன்,
வேலூர் மாவட்டம், காட்பாடி, வள்ளிமலை கூட்ரோடு இயங்கி வரும் மின்சார வாரிய அலுவலகத்தில், ஊழியர்கள் சிலர் குடிபோதையில் குத்தாட்டம் போடுகிறார்களாம்.
இரவு பணி மேற்கொள்வதாக சொல்லி வருபவர்களே இதில் அதிகம் என்கிறார்கள்.
இந்நிலையில் அந்த பகுதியில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறதாம். குறிப்பாக இரவு நேரத்தில் இந்த ப்ராப்ளம் ஏற்படுகிறதாம்.
சமீபத்தில் ஓர் இரவில் அப்படி மின் துண்டிப்பு ஏற்பட்டது, ஆனால் நீண்ட நேரமாகியும் மின்சாரம் வரவில்லை. ஆகவே மேற்படி அலுவலகத்துக்கு உள்ளூர்வாசிகள் சிலர் சென்று முறையிட்டுள்ளார்கள்.
அப்போது அங்கு மூன்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் நேற்று குடிபோதையில் இருந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட முரளி அவரது வீட்டில் மின்சாரம் இல்லை புழுக்கம்தாங்க முடியவில்லை என்று முறையிட்டுள்ளார்.
எங்களால் இரவு நேரத்தில் பழுதை சரி செய்து மின்சாரம் தர முடியாது நாளை காலை வருமாறு திருப்பி அனுப்பினராம்.
ஏமாற்றமடைந்த முரளி, அந்த இரவு மின்சார வாரியத்தில் குழந்தைகளுடன் தஞ்சம் அடைந்தார்.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரை பெரும் போராட்டத்திற்கு பிறகு இரவு 12 மணிக்கு மின் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதுவும் போதையில் தள்ளாடியபடியே கடமையாற்றியுள்ளார்கள்.
இரவு பணி மேற்கொள்ளும் மின்சார ஊழியர்கள், அலுவலகத்தில் மது அருந்துவதை தடுத்து பாதுகாப்புடன் கடமையாற்ற உயரதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.