மீண்டும் மஞ்ப்பை வழங்கிய அமைச்சர் துரைமுருகன்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
வேலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ரூ.49.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட்டரங்கத்தை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மஞ்ச பைகளை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுயஉதவி குழுக்களுக்கு மஞ்ச பைகளை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் வழங்கினார்.
மேலும், குடிநீர் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.து.மு.கதிர் ஆனந்த், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார், மாநகராட்சி மேயர் திருமதி.சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் திரு.சுனில்குமார், மாநகராட்சி ஆணையாளர் திரு.இரத்தினசாமி,இ.ஆ.ப., மற்றும் மண்டல குழு தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.