2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மக்களை ஆச்சரியப்படுத்தும் - ராகுல்! காங்கிரசார் பேச்சை கேட்க இங்கு ஆளில்லை - மத்திய மந்திரி!

2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மக்களை ஆச்சரியப்படுத்தும் - ராகுல்! காங்கிரசார் பேச்சை கேட்க இங்கு ஆளில்லை - மத்திய மந்திரி!

 ஜார்ஜ்.ரவி,

  அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சான்பிரான்சிஸ்கோ நகரின் சாண்டா கிளாராவில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

  பின்னர், வாஷிங்டன் டிசியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தியிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

   அதில், கர்நாடக தேர்தல் வெற்றி பாராளுமன்ற தேர்தலிலும் தொடருமா என கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகள் நன்றாக ஒன்றுபட்டுள்ளன. அது மேலும் மேலும் ஒன்றிணைந்து வருகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். அங்கே நிறைய நல்ல வேலைகள் நடக்கின்றன என்று நினைக்கிறேன்.

   எதிர்க்கட்சிகளுடன் போட்டியிடும் இடங்கள் இருப்பதால் இது ஒரு சிக்கலான விவாதம். எனவே கொஞ்சம் கொடுக்கல் வாங்கல் தேவை. ஆனால் அது நடக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வரும் 2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மக்களை ஆச்சரியப்படுத்தும் என்றார்.

  இந்நிலையில் ராகுல் காந்தி வெளிநாடு சென்று பேசுவது ஏன் தெரியுமா? இந்நிலையில், மத்திய மந்திரி ஆர்.கே.சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவில் காங்கிரஸ் தலைவர்களுக்கு என்று பார்வையாளர்கள் யாரும் இல்லை. அதனால் அவர்கள் வெளிநாடு போகிறார்கள். அவர்கள் 100 முதல் 200 பேரை அழைத்து அறை ஒன்றில் கூட செய்து சொற்பொழிவாற்றுகிறார்கள். வெளிநாட்டுக்குச் சென்று, தங்களது சொந்த நாட்டை விமர்சிக்கும் இவர்கள் என்ன மாதிரியான ஆட்கள்? என்று நான் நினைத்துப் பார்க்கிறேன். இதுபோன்ற விஷயங்களை வேறு எந்த அரசியல் தலைவர்களும் செய்ய மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.