முன்னாள் அமைச்சர் தங்கமணியின் இடங்களில் ரெய்டு!

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் இடங்களில் ரெய்டு!

  கு.அசோக்,

   முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர் வீடு மற்றும் கடைகளில் உட்பட 9 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

   தங்கமணி மீது ஏற்கனவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் முந்தைய தேர்தலில் தங்கமணி போட்டியிட்ட போது தாக்கல் செய்த சொத்து விவரங்களில் அவர் மற்றும் அவரது குடும்பதினருக்கு 1 கோடியே ஒரு லட்சம் பணம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

  ஆனால் தற்போது  வருமானத்துக்கு அதிகமாக 5 கோடி ரூபாய் வைத்திருந்ததை கண்டுபிடித்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 இந்நிலையில் வேலூர்மாவட்டம்,காட்பாடி அடுத்த செங்குட்டையில் உள்ள முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணியின் உறவினர் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான  வீடு மற்றும் கடைகளில்  இன்று அதிகாலை 4-மணி முதல் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து பல மணிநேரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

   தமிழகம் முழுவதும் நடக்கும் லஞ்ச ஒழிப்பு சோதனையில் வேலூர் மாவட்டத்திலும் ஓர் இடத்தில் சோதனை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.