ஏலகிரி மலையில் தான் எள்ளு பயிரை முதன் முதலில் பயிரிட்டனர்! ரூ.12 கோடியே 94 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் எ.வ.வேலு  பேச்சு!

ஏலகிரி மலையில் தான் எள்ளு பயிரை முதன் முதலில் பயிரிட்டனர்! ரூ.12 கோடியே 94 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் எ.வ.வேலு  பேச்சு!

ம.பா.கெஜராஜ்,

 ஏலகிரி மலையில் தான் எள்ளு பயிரை முதன் முதலில் பயிரிட்டனர் என்றும், ரூ.12 கோடியே 94 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!

 தமிழகத்தில் எந்த ஒரு மலைப்பகுதியில் இல்லாத வகையில் புதூர்நாடு மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதல்படி 3041 நபர்களுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது என மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் பெருமிதம்.

     திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதூர்நாடு மலைவாழ் மக்களுக்கு மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் 3041 பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் 1121 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 4162 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 94 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

   புதூர்நாடு மலை அரசு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.28.84 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அகில இந்திய அளவில் மலைவாழ் மக்கள்களுக்கான முதல் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவு கட்டடம், மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டிலான கட்டடம், திருப்பத்தூர் நகரில் ரூ.38 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையம், நாட்றம்பள்ளி ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மண் பரிசோதனை மையம் என மொத்தம் ரூ.2 கோடியே 1 இலட்சத்து 84 மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் திறந்து வைத்தார்.

     திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி ஏலகிரிமலை கோடை விழா அரங்கத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 759 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 27 இலட்சத்து 82 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் வழங்கினார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதூர்நாடு மலைவாழ் மக்களுக்கு மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் 4162 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 94 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.தேவராஜி திரு.அ.நல்லதம்பி திரு.அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தெரிவித்ததாவது:-

  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக தாய்மார்களுக்கு இலவச பேருந்து வசதி, பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூ.1000/-, மக்களை தேடி மருத்துவம் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவிகள், தாட்கோ மூலம் வங்கி கடனுதவிகள், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றது.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட புதூர்நாடு மலைப்பகுதியில் உள்ள 32 கிராமங்களில் சுமார் 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். புதூர் நாடு மலைப்பகுதியில் புதூர் நாட்டில், 30 படுக்கைகள் கொண்ட ஒரு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் புங்கம்பட்டு நாட்டில், ஒரு கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், மேலும் நெல்லிவாசல் நாடு, புலியூர், சேர்க்கானூர் ஆகிய பகுதிகளில் மூன்று துணை சுகாதார நிலையங்களும் அமைந்துள்ளன. 

 தினமும் 150 முதல் 200 வெளி நோயாளிகள் சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். 

 *புதூர் நாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் 30 பிரசவங்கள்  நிகிழ்கின்றன. இரண்டு 108 ஆம்புலன்ஸ்கள் புதூர் நாட்டில் தயார் நிலையில் எப்பொழுதும் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அகில இந்திய அளவில், மலைவாழ் மக்களுக்கான முதல் பச்சிளங் குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவு (Special Newborn care Unit)ரூ.28.84 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரே நேரத்தில் 6 பச்சிளங்குழந்தைகளை பராமரித்து, சிகிச்சை அளிக்க முடியும்.  இதனால், இப்பகுதி மக்கள் திருப்பத்தூர், தருமபுரி ஆகிய மருத்துவமனைகளுக்கு செல்லாமல் இங்கேயே சிகிச்சை பெற முடியும்.

            மட்றப்பள்ளி - புதூர்நாடு சாலையை 13.53 கிலோ மீட்டர் நீளத்திற்கு வனத்துறை வழியாக செல்கிறது. ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டம் 2021-2022 கீழ்  ரூ.18 கோடி மதிப்பீட்டில், சாலை அகலப்படுத்தப்பட்டது. மலைச் சரிவுகளில் தடுப்புச்சுவர் கட்டுதல், மழைநீர் வழிந்தோடும் வண்ணம் சிமெண்ட் தளம் அமைத்தல் பணிகள் 6 மாத காலத்தில் விரைந்து முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, மழைக்காலங்களில் போக்குவரத்து தடையின்றி சாலையை பயன்படுத்தலாம். இச்சாலையால் 40 கிராமத்தில் உள்ள  மலைவாழ்மக்கள் பயன்பெறுவர்.

  சிங்காரப்பேட்டை சாலையில் தொடங்கி, தரைப்பகுதியில் உள்ள மட்றப்பள்ளி, மேற்கத்தியனூர் வழியே ரூ.6.26 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது. இப்பணிகள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்படும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான மலை கிராமம்  இந்த ஏலகிரி மலை கிராமம் தான் தமிழகத்திலேயே முதன்முதலாக ஏலகிரிமலையில் தான் எள்ளு வகை பயிர்களை பயிரிட்டப்பட்டது என மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தெரிவித்தார்.

   தொடர்ந்து, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் 28 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 65 இலட்சம் கடனுதவியும், தோட்டக்கலைத்துறை மூலம் 25 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 57 ஆயிரம் மதிப்பிலும், பிற்பட்டோர் நலத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும், 23 பயனாளிகளுக்கு விவசாய மின் இணைப்பு பெறுவதற்கான ஆணைகளும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் திட்டத்தின் கீழ் (றிஆயுலு(பு) 100 பயனாளிகளுக்கு வீடுகள்  ரூ.2 கோடியே 40 இலட்சம் மதிப்பிலும், முதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.6 கோடியே 60 இலட்சம் இணைப்பு சாலைகள், 82 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், 3041 பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ்களும், தாட்கோ மூலம் 7 பயனாளிகளுக்கு ரூ.54 இலட்சம் மதிப்பில் சுயதொழில் புரிவதற்கான கடனுதவி என மொத்தம் 4162 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 94 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, திட்ட இய்குநர்கள் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.செல்வராசு, திருமதி.ரேணுகாதேவி, மாவட்ட ஊராட்சி தலைவர் திரு.என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட பால் வளத்தலைவர் திரு.எஸ்.இராஜேந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி.பாலா, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் திரு.முருகேசன், துணை இயக்குநர்கள் திரு.பச்சையப்பன், திரு.இராமச்சந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள் திரு.அருண்பாண்டியன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.ஜெயகுமார், ஒன்றியக்குழு தலைவர்கள் திருமதி.விஜயாஅருணாச்சலம், திருமதி.சத்யாசதீஷ்குமார், திருமதி.திருமதி, திரு.சுரேஷ்குமார், வட்டாட்சியர் திரு.சிவப்பிரகாசம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி.சத்யவாணி, திருமதி.கவிதாதண்டபாணி, திருமதி.சிந்துஜா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திருமதி.உமா, திருமதி.இலட்சுமி, திரு.துக்கண், ஊராட்சி மன்ற தலைவர்கள் (புதூர்நாடு) திருமதி.மகாலட்சுமி (ஏலகிரிமலை) திருமதி.இராஜஸ்ரீகிரிவேலன், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.