பள்ளிகூடத்தில் நாட்டு வெடி குண்டு போட்ட மாணவர்கள்!

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்கள் நாட்டு வெடி வெடித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நாட்டு வெடி கொண்டு வந்து வெடித்த அதே பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவனை ஆசிரியர்கள் கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது,
மேலும் அதிக சத்தத்துடன் அனுகுண்டு வெடித்ததால் பதறிய ஆசிரியர்கள் வெடி வெடித்த மாணவர்களை அழைத்து எச்சரிக்கை செய்ததுடன் பள்ளிக்கு மாணவர்கள் நாட்டு வெடிகுண்டு கொண்டு வந்தது குறித்து ஆம்பூர் காவல்துறையினருக்கு தெரிவித்தனர்.
இதனை அடுத்து அங்கு காவல்துறையினர் விசாரணை செய்து பள்ளியில் நாட்டு வெடி வெடித்த மாணவர்களுக்கு இனி வரும் காலங்களில் இது போல் செய்ய கூடாது என அறிவுறுத்தினார்கள்
பள்ளி வளாகத்தில் அதிக சத்தத்துடன் வெடிகள் வெடித்ததால் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள் திடீர் அதிர்ச்சிக்குள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.