விஷமாக மாறிய சத்துணவு மாவு தோசை!

விஷமாக மாறிய சத்துணவு மாவு தோசை!

ஜி.கே.சேகரன்,

சோளிங்கர் அடுத்த சின்ன பரவத்தூர் கிராமத்தில் சத்துணவு மாவில் தோசை சாப்பிட்ட 6 குழந்தைகள் உட்பட 9 பேருக்கு வயிற்றுப் போக்கு.-அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருகிறனர்.

   இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சின்ன பரவத்தூர் கிராமம் அருந்ததி பாளையம்  பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளியான சிவகுமார் மற்றும் ஜெயம்மாள்.

  சனிக்கிழமை மதியம் மற்றும் இரவு நேரத்தில் சிவகுமார் ஜெயம்பாம்மாள்  இரு வீட்டில்  சத்துணவு மாவில் தோசை செய்து சாப்பிட்டுள்ளனர்.

   சத்துணவு மாவு சாப்பிட்ட இரு குடும்பத்தை  சேர்ந்த  ஆறு  குழந்தைகள் உட்பட மூன்று பெரியவர்களுக்கு  வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட ஒன்பது பேரும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 இதில் 1 குழந்தை உட்பட 3 பேர் தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் ஆறு பேர் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திடீரென ஒன்பது பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் கிராமத்தைச் சேர்ந்த மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது