சிறுமிக்கு ஆறுமாதமாக தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது! முதல்வர் டுவிட்!
பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
சின்மயா வித்யாலயாவில் 17 வயது மாணவி நவம்பர் 11ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் கோவை ஆசிரியரின் சேஷ்ட்டைகளை மறைப்பதாகக் கூறப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியையான 31 வயது மிதுன் சக்கரவர்த்தியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவையில் உள்ள பிரபல பள்ளியான சின்மயா வித்யாலயாவில் 12ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 31 வயது ஆசிரியரை கோவை போலீசார் கைது செய்தனர்.
நவம்பர் 11, வெள்ளிக்கிழமை அன்று 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், பின்னர் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி ஆறு ஆண்டுகளாக துன்புறுத்தியதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாட்ஸ்அப் வாயிலாக மிதுனுக்கும் மைனர் மாணவிக்கும் இடையிலான ஆறு நிமிட அழைப்பு பதிவுகளின் ஸ்கிரீன் ஷாட்கள் த்ற்போது வெளியாகியுள்ளன.
ஆடியோ கிளிப்பில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரின் குரல் பாலியல் வன்கொடுமை பற்றி பேசுவதைக் உறுதிப்படுத்தியது. உணர்வுகளை தூண்டும் விதமாக அவர் பேசியுள்ளதும் வெளியானது
இதனால் மனமுடைந்து போன மாணவி, பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிப்பதாகக் கூறிய போது, ஆசிரியர் மிரட்டியுள்ளார்.
17 வயது சிறுமி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டினர்.
வாட்ஸ்அப் பகிர்வில் தன்னால் தூங்க முடியவில்லை என்று சிறுமி கூறியுள்ளார். “இந்தப் பிரச்சினையை நான் விட்டுவிட வேண்டுமென நீங்கள் விரும்பினால், தயவுசெய்து பள்ளியை விட்டு வெளியேறுங்கள். இது எனக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவி” என்கிறார் அந்த மாணவி.
அதன் பின்னர்தான் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறாள்.
இந்த வழக்கை விசாரிக்கும் ஆர்எஸ் புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தார் மிதுன் சக்ரவர்த்தி மீது ஐபிசி 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) மற்றும் பிரிவு 9 (எல்) (குழந்தையை ஒன்றுக்கு மேற்பட்ட முறை அல்லது பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தவர்) 10 (மோசமான பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டமும் பதியப்பட்டுள்ளது.
பெற்றோர் மற்றும் சிறுமியின் தாயின் வாக்குமூலத்தின்படி, பாலியல் துஷ்பிரயோகம் ஆறு மாதங்களாக நடந்ததாகக் கூறப்படுகிறது. சிறுமி தனது பள்ளியை மாற்றுமாறு பெற்றோரிடம் பலமுறை கேட்டும் காரணத்தை தெரிவிக்கவில்லை.
இந்த ஆண்டு செப்டம்பரில், அவர்கள் அவளை நகரத்தில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்றினர். மருத்துவ காரணங்களால் மிதுனும் செப்டம்பர் மாதம் பள்ளியை விட்டு வெளியேறியதாக நிர்வாகம் தெரிவித்து அவனை காப்பாற்ற முயன்றுள்ளது.
எனினும் காவல் அலுவலர்கள் சட்டபடி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
ஆனாலும் இதற்கிடையே, மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சக மாணவர்கள் உயிரிழந்த மாணவியின் வீட்டின் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளதாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தனது டுவிட் பதிவில் தெரிவித்துள்ளார். மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது;- “
கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது.சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.