டாடா சபாரி வாகனத்தில் சரக்கு கடத்தல்! மடக்கி பிடித்த போலிசார்!!

டாடா சபாரி வாகனத்தில் சரக்கு கடத்தல்! மடக்கி பிடித்த போலிசார்!!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,

சென்னை மதுவிலக்கு அமலாக்க பிரிவு கண்காணிப்பாளர் பெருமாள் இ.கா.ப. அவர்கள் உத்தரவின் பேரில், விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு தனிப்படை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, திருக்கனூரில் இருந்து  கறுப்பு நிற டாடா சபாரி கலர் கார் போலிசாரை பார்த்ததும் வேகமாக சென்றுவிட்டது.

 அதை பின் தொடர்ந்து விழப்புரம் பாப்பாங்குளம் அருகே  மஞ்சல் பாலம் 4, 5, 7 மற்றும் போக்குவரத்து காவலர் முலம் கார் மடக்கி பிடிக்கப்பட்டது.

 காரை நிறுத்திவிட்டு ஓட்டுநர் உட்பட இருவர் தப்பி ஓடி விட்டனர்.

 பிடிபட்ட காரை  தணிக்கை செய்ய 83 பெட்டிகளில் மொத்தம் 1680 பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 அவற்றை பறிமுதல் செய்து, மேற்படி தப்பியோடிய எதிரிகள் மீது மது விலக்கு அமல் பிரிவு குற்ற எண்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.