மாணவர்களுக்கு கட்டிங் ஷேவிங் செய்த தலைமை ஆசிரியர்! கொதிப்பில் பெற்றோர்!

மதன்,
தலைமுடியை விதவிதமாக வெட்டிக் கொண்டு வகுப்புக்கு வந்த மாணவர்களை வரிசையாக அமர வைத்து கட்டிங், ஷேவிங் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஒரு தலைமையாசிரியர்.
வேலூர் மாவட்டம், வேலூர் மையப்பகுதியில் உள்ளது வெங்கடேசுவரா மேநிலைப்பள்ளி. பழமை வாய்ந்த் இந்த பள்ளிக்கூடம் திருப்பதி தேவஸ்தானத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது.
இந்த பள்ளிக்கூடத்துக்கு நெப்போலியன் என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். கண்டிப்புக்கு பெயர் பெற்ற அவர் இன்று செய்த காரியத்தால் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.
இந்த பள்ளியில் ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ மாணவர்கள் சிலர் தலைமுடியை வித விதமாக கட்டிங் செய்து கொண்டும், தாடி வைத்துக் கொண்டும் வருகின்றனர்.
இது குறித்து தலைமை ஆசிரியர் ஏற்கனவே எச்சரித்துள்ளார். இருந்தும் கூட மாணவர்கள் சிலர் ஒழுங்காக கிராப் வெட்டாமல் வந்துள்ளார்கள்.
இதனால் டென்ஷனான தலைமை ஆசிரியர், அவரே முடி திருத்துபவராக மாறி மாணவர்களின் தலைமுடியை கத்தறி கோலால் கத்தறித்துவிட்டார்.
தலைமை ஆசிரியரின் இந்த செயலைப் பார்த்த பல மாணவர்கள் அவரிடமிருந்து தப்பிக்க சுவர் எகிறி குதித்து ஓடியிருக்கிறார்கள்.
இருந்தாலும் சிக்கிய மாணவர்களுக்கு அரைகுறையாக முடிவெட்டிவிட்டு விரட்டினார் தலைமை ஆசிரியர்.
மாணவர்களின் தலை முடி, திருப்பதி மொட்டை போல் அரைகுறையாக இருப்பதைப் பார்த்த சில பெற்றோர்கள் அது குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்ட போது, உங்களுக்கு நூறு ரூபாய் மிச்சம் தானே என்கிறாராம். இதனால் அவர்கள் கொதித்துவிட்டார்களாம்.
மாணவர்கள் முடியை ஒழுங்காக வெட்டிச் சென்றால் அவர் ஏன் டென்ஷனாகியிருக்கப் போகிறார். பெற்றோர்களும் சிந்திக்க வேண்டுமல்லவா?