முன்னெச்சரிக்கையாக களம் இறங்கிய இராணிப்பேட்டை ஆட்சியர்!

முன்னெச்சரிக்கையாக களம் இறங்கிய இராணிப்பேட்டை ஆட்சியர்!

கு.அசோக்,

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிச்சரிக்கையாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரதான கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்று துவக்கி வைத்தார்.

  இராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதான கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

   வடகிழக்கு பருவமழை காலம் துவங்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு ஆகிய பகுதிகளில் மழைநீர் பாலாற்றில் கலக்கும் முக்கிய பிரதான கால்வாய்களை தூர்வாரும் பணிகள் இன்று துவங்கப்பட்டன.

  இந்த பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கொடி அசைத்து தொடக்கி வைத்ததோடு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.