இலவச விமான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

ர.நி.ஆனந்தன்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிப்புரிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பி.டி.சி. ஏவியேஷேன் அக்காடமி நிறுவனம் மூலம் விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிப்புரிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியினை பெற 18 முதல் 25 வயது வரை உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கும், கல்வித் தகுதியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதம் ஆகும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகையான ரூ.20,000/- த்தை தாட்கோ வழங்கும்.
மேற்கண்ட பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் யுயுளுளுஊ (யுநுசுழுளுறியுஊநு ளுமுஐடுடு ளுநுஊவுழுசு ஊழுருழிஊஐடு)-யால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களான ஐனெபைழ யுசைடவீநௌஇ ளுஜீயஉந துநவஇ புழ குசைளவஇ ஏளைவசயஇ யுசை ஐனெயை போன்ற புகழ் வாய்ந்த நிறுவங்களில் பணிபுரிய100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.
மேற்கண்ட திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளமான றறற.வயானஉழ.உழஅ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பித்து பயன் பெற மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா, இ.ஆ.ப., அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.