வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த போது ஸாரி சொன்ன ஆட்சியர்!

 வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த போது ஸாரி சொன்ன ஆட்சியர்!

 ஜி.கே.சேகரன்,

 வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வேலூர், அணைக்கட்டுகேவி குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன.

 வாக்கு எண்ணும் மையம் வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட உள்ளது.

இம்மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனியாக வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை இருப்பு வைக்கும் அறைகள் அமைக்கப்பட உள்ளன.

  வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் மேஜைகள் அமைப்பதற்கு தேவையான அளவிற்கு இடவசதி உள்ளதா எனவும், வாக்குப்பதிவு இயந்திரங்களை இருப்பு வைக்கும் அறையில் போதுமான பாதுகாப்பு வசதிகள் உள்ளனவா எனவும் ஆராய்ந்தார்.

 பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள் தங்களுக்கு சம்பந்தப்பட்ட தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்வதற்காக தனித்தனி தடுப்புகள் அமைத்து முறையாக வழிகளை ஏற்படுத்த வேண்டும், அடிப்படை வசதிகளான குடிநீர் கழிவறை வசதிகள் உணவு ஆகியவைகள் கிடைக்க ஏற்பாடு செய்ய  வேண்டும் எந்த பிரச்சணையுமின்றி வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என அறிவுறுத்தினார்.

 இந்த ஆய்வு நடக்கும் போது பொறியியல் மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனா. அதை கவனித்த ஆட்சியர் ஸாரி என்றார்.