ஆறுபேரை கொன்ற காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம்! ஓட்டம் பிடித்த அதிகாரிகள்!

கு.அசோக்,

 ஆறுபேரை கொன்ற காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பீதிலடைந்தனர்- பாதுகாப்பாக இருக்க  மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வாகனங்களில் விழிப்புணர்வு  - காட்டு யானைகள் வனத்துறை மற்றும் காவல்துறையினரை துரத்தியதால் தப்பி ஓடிவந்து உயிர் பிழைத்தனர். யானையை ஊர்மக்கள் கூச்சலிட்டு விரட்டுவதால் அவை மிரண்டு கோபம்மடைந்து காணப்படுகிறது. 

 திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் பகுதியில் நேற்று வந்த இரண்டு காட்டு யானைகள் கரும்புத் தோட்டத்தில் தஞ்சம் புகுந்து, நாசம் செய்ததுடன், அருகே உள்ள ஓடையில் தண்ணீர் அருந்திவிட்டு  வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது.

   இதனை விரட்ட சென்ற வனத்துறையினர் மற்றும் காவல்துறையினரை காட்டு யானைகள் துரத்தியதால் தப்பித்தால் போதுமான அவர்கள் தலைதெறிக்க  ஓடி உயிர் பிழைத்தனர்.

 இந்நிலையில் தர்மபுரியில் இருந்து வந்த தனி படை ஒன்று வரவழைக்கப்பட்டு காட்டு யானைகளை துரத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

 அதடிப்படையில் இன்று  நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்தபோது அளவுக்கு அதிகமான பொதுமக்கள் சாலையின் நடுவே நின்றதால் மீண்டும் கிராம பகுதிக்குள் காட்டு யானைகள் நுழைந்தது. பொதுமக்கள் அலறியடித்து வீட்டிற்குள் தஞ்சம் புகுந்தனர்.

 அதை தொடர்ந்து யானைகள் மாந்தோப்பிற்குள் தஞ்சம் புகுந்துள்ளது.  வனத்துறை ஊழியர்களும் அதிகாரிகளும் இரண்டு யானைகளையும்  காட்டுக்குள் விரட்ட தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

 இந்நிலையில் யானைகளுக்கு கோபம் ஏற்படும் அளவுக்கு பொதுமக்களின் செயல்பாடுகள் உள்ளது.

 இந்த காட்டுயானையானது இதுவரை ஆறு பேரை கொன்றுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வரவேண்டாம் என ஒலி பெருக்கிகளின் மூலமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது இருந்தாலும் யானைகள் அக்கிராமத்திலேயே தஞ்சமடைந்துள்ளதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.