கட்சிக் கொடிகளை காரில் கட்டிக்கொண்டு செல்லக்கூடாது!

ஜி.கே.சேகரன்,
வேலூர் மாவட்ட ஆட்சியர் வே. இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்த அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட கூடாது, சாலையின் குறுக்கே தோரணங்கள் அமைக்க கூடாது, போக்குவரத்திற்கு இடையூறாக விளம்பர பேனர்களை வைக்க கூடாது.
அனுமதி பெற்றுதான் கிராம பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் எழுத வேண்டும்.
தேர்தல் விதிப்படி கொடிகம்பங்களில் உள்ள கொடிகளை அந்தந்தகட்சியினரே அகற்றி வைக்க வேண்டும், துண்டு பிரசுரங்கள் எவ்வளவு வெளியிடுகிறீர்கள் என அரசியல் கட்சியினர் தகவலை வெளியிட வேண்டும்.
கார்களில் கட்சி கொடிகளுடன் செல்ல கூடாது ஆகியவைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது .
மேலும் தேர்தல் செலவீணங்கள் பட்டியல் உள்ளிட்ட பல இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.