சிலிண்டர் தீ விபத்து:- தடுப்பது எப்படி!! ஒத்திகை!!!
கு.அசோக்,
தீ விபத்து ஏற்படும் போது அதை எப்படி கையாள்வது குறித்து பொதுமக்களுக்கு ஒத்திகையை தத்துருபமாக நடித்துக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்திய தீயணைப்பு வீரர்கள்
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பிரதாம் இயற்கை எரிவாயு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இராணிப்பேட்டை தீயணைப்பு நிலையம் ஆகியவை இணைந்து போலி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் இயற்கை எரிவாயு மையத்தில் பணிபுரியும் ஊழியர்களை கொண்டு இணைந்து தீ விபத்துக்கள் ஏற்படும் போது அதிலிருந்து, எவ்வாறு தப்பித்துக் கொள்வது, விபத்துகளில் சிக்கி தவிப்பவர்களை எவ்வாறு மீட்பது, மத்திய அரசு பிரதாம் இயற்கை எரிவாயு மையத்தின் மூலமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பூமியில் இருந்து பைப் லைன் மூலமாக அமைக்கப்பட்டுள்ள சிலிண்டர்களிலிருந்து எரிவாயு வெளியேறி தீ விபத்து ஏற்படும்போது அதனை எவ்வாறு தடுப்பது, எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் மூலம் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையாள்வது குறித்த போலி ஒத்திகையை தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களிடையே தத்ரூமாக நடித்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்கள்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்று வரும் ஒத்திகை நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வளர்மதி சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து பொதுமக்களிடையே தீ விபத்து ஏற்பட்டால் அதை தடுப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், மத்திய அரசின் இயற்கை எரிவாயு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.