மண்டபம் அரங்குகளில் பரிசு பொட்கள் பதுக்கினால் நடவடிக்கை பாயும்! திருப்பத்தூர் கலெக்டர் எச்சரிக்கை!

ஆர்.ரமேஷ்,
நாடாளுமன்ற பொதுத் தேர்தல், 2024 வருகின்ற 19.04.2024 அன்று நடைபெறுவதை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அச்சக, தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் மற்றும் நகை அடகு கடை உரி மையாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை பின்வற்றுவது தொடர்பான ஆலேசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.
அச்சக உரிமையாளருக்கு வழங்கிய அறிவுறைகள்:
ஓவ்வொரு அச்சக உரிமையாளரும் தாங்கள் அச்சிடும் துண்டு பிரசுரம், போஸ்டர் ஆகியவற்றிற்கு அடியில் உரிமையாளர் பெயர் மற்றும் முகவரி விவரங்களை தவறாமல் அச்சிட வேண்டும், அச்சக உரிமையாளர்கள் வன்முறையை தூண்டும் வகையிலோ, தனியரை தாக்கும் வகையிலோ துண்டு பிரசுரங்கள் மற்றும் போஸ்டர்கள அச்சிட கூடாது.
ஹேட்டல்/லாட்ஜ் உரிமையாளருக்கு வழங்கிய அறிவுறைகள்:
வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பிருந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரையில் வெளியூர்களிலிருந்து வரும் சந்தேகமான நபர்களை எக்காரணம் கொண்டும் ஹேட்டல்களிலோ, லாட்ஜ்களிலோ தக்க வைக்க கூடாது, லாட்ஜ்களில் தங்கும் நபர்களின் பெயர்கள், முகவரி, தொழில் மற்றும் தொலைபேசி எண் அடங்கிய விவரங்கள் உரிய பதிவேடுகளில் சரியாக பதிவு செய்து காவல் துறையினர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கேட்டும்போது ஒப்படைக்க வேண்டும் என ஹேட்டல்/லாட்ஜ் உரிமையாளர்களையும் அறிவுறுத்தினார்.
திருமண மண்டப உரிமையாளருக்கு வழங்கிய அறிவுறைகள்:
மேலும், அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் கூட்ட அரங்குளின் உரிமையாளர்களும் தேர்தல் அறிவிப்பு வரப்பெற்று, தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருக்கும் வரை தங்கள் மண்டபங்களில் செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான பதிவுகளை, பதிவு செய்தமைக்கான திருமண/பூப்புனித/இதர நிகழச்சிக்கான அழைப்பிதழின் நகல்களை தினசரி நேரடியாகவோ/தபால் மூலமாகவோ, தேர்தல் நடத்தும் அலுவலர்/உதவி தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், திருமண மண்டபங்கள் மற்றும் கூட்ட அரங்குகளை அரசியல் கட்சியினர் பரிசு பொருள்கள் விநியோகம் செய்வதற்கு பயன்படுத்த அனுமதிக்க கூடாது எனவும் அறிவுறை வழங்கினார்.
நகை அடகு கடை உரிமையாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான அறிவுறைகள்:
நகை அடகு கடை உரிமையாளர்கள் உரிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் இல்லாமல் கடன் கொடுக்க கூடாது எனவும், அவ்வாறு முறையான ஆவணங்கள் இல்லாமல் அரசியல் கட்சியினர் சார்பில் பணம் கொடுப்பது கண்டறிப்பட்டால் தேர்தல் விதிகளை மீறியதற்காக உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தார்.
தொடர்ச்சியாக நாடாளுமன்ற பொது தேர்தல்-2024 திருப்பத்தூர், நாட்றம்பள்ளி மற்றும் வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மண்டல மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்தரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளையும் பார்வையிட்டார். மேலும் பாதுகாப்பு அறைகளை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவலர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.