மத்திய குழு வேலூரில் விசிட்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் மேல்பாடி , கொண்டகுப்பம் கிராமங்களை இணைக்கும் பாலாறு தரைப்பாலம் முற்றிலுமாக மழைநீரில் அடித்து செல்லப்பட்டதை மத்திய குழுவின் நிதித்துறை செலவின மேற்பார்வையாளர் திரு.ஆர்.பி.கௌல், மத்திய நீர்வளத்துறை இயக்குநர் திரு.ஆர்.தங்கமணி, மத்திய மின்சார ஆணைய உதவி இயக்குநர் திருமதி.பவ்யா பாண்டே, பொறுப்பு அலுவலர் முதன்மை செயலாளர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை திரு.குமார் ஜெயந்த் இஆப அவர்கள் முன்னிலையில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெகுமாரவேல் பாண்டியன் , இஆப , அவர்கள் நேரடியாக மத்திய குழுவினருக்கு காண்பித்து பாதிப்பினை விவரித்தார்.
உடன் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஜெகத்ரட்சகன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்கதிர் ஆனந்த் அவர்கள் மற்றும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன் அவர்கள் உள்ளனர் .