ஆயுதப்படையில் பாலியல் தொல்லை! எரிபொருள் திருட்டு?காப்பத்துங்க என்று கடிதம்!களங்கம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை!

ஆயுதப்படையில் பாலியல் தொல்லை! எரிபொருள் திருட்டு?காப்பத்துங்க என்று கடிதம்!களங்கம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை!

ம.பா.கெஜராஜ்,

  வேலூர் மாவட்ட ஆயுதப்படை ஆளிநர்கள், மாவட்ட காவல் அலுவலர் அவர்களுக்கு கண்ணீருடன் எழுதிய ஐந்து பக்கம் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறதாம். கடிதத்தை படித்துவிட்டு விசாரணை நடத்தி உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே நடவடிக்கை எடுத்தால் போதும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் சமூக வலைதளங்களை தவறாக தங்களின் சுய லாபத்திற்காகவும் மற்றும் சக காவலர்களின் மரியாதைக்கும்,மதிப்பிற்கும் களங்கம் விளைவிப்பவர்கள் யார் என கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  அந்த கடிதத்தில் அப்படி என்னதான் எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

 பெயர் மற்றும் ஆபாச நடவடிக்கை ஆகிவற்றை சென்சார் செய்து இந்த செய்தி வெளியிடப்படுகிறது.

  மண்டபத்திலுள்ள அறை மற்றும் சரக அலுவலரின் அறையில் அசிங்கம் நடக்கிறது.

திருவண்ணாமலையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு அலுவலர் பாலியல் செயல்களில் ஈடுபட்டு சிக்கியதால் அவரை வேலூர் ஆயுதப்படைபிரிவுக்கு மாறுதல் செய்தனர் உயரதிகாரிகள்.

அப்படி பந்தாடப்பட்டவர், அவரை மாமா என்றே அழைக்கிறார்கள்,  தற்போது அவரது லீலைகளை இங்கும் செய்து வருகிறார். (இந்த இடத்தில் மூன்று பெண் போலிசாரின் பெயர் மற்றும் காவலர் எண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கிறது.)

சார்பு தணிக்கை மற்றும் அணிவ்பகுப்பு நேரங்களில் பெண் போலிசாரின் டீ ஷர்ட்டை ஆபசமாக பிடித்து இழுக்கிறார்.

வட்டார போக்குவரத்தை கவனிக்கும் பெண் அலுவலர் அவருடன் ஒருவரை இணைத்துக் கொண்டு வசிப்பது பற்றி மேலிடம் வரைக்கும் புகார் சென்றது. அதன் பின்னர் அந்த பெண் ஆய்வாளரின் கூடா நட்புக்காரரை குடியாத்தம் டிராஸ்பர் செய்தனர். அந்த வகையில் அவர்களை கஷ்டப்பட்டு பிரித்தனர்.

ஆனாலும் அந்த பணியிட மாற்றலை புஸ்ஸ் ஆக்கி மீண்டும் அந்த கள்ள ஜோடி இணைந்து, சொந்த கணவன் மனைவி போல் வசிக்கின்றனர். இவர்கள் ஆயுதப்படைக்கு சொந்தமான காவல் வாகனங்களின் எரிபொருட்களை திருடி விற்கின்றனர்.

 இத்தனைக்கும் பெண் அலுவலருக்கு சென்னை டிராஸ்பர் வந்ததாம். அதை தன்னுடைய திறமையால் ரத்து செய்ய வைத்தாராம்.

மேலும் கட்சிக்காரர் பெண் போலிஸ் ஒருவரை பாலியல் ரீதியாக சீண்டிய ஒரு எஸ். ஐ. திருவண்ணாமலை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அவர் தற்போது மீண்டும் வேலூர் ஆயுதப்படைக்கு வந்து 17வது பேட்ச்சில் உள்ள பலருக்கு பாலியல் சீண்டல் ஏற்படுத்தி வருகிறார்.

  திருவண்ணாமலையிலிருந்து வேலூர் ஆயுதப்படைப்பிரிவில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றும் நபர் அவருக்கு வேண்டப்பட்ட, அவரது மாவட்டத்தைச் சேர்ந்த பெண் போலிசாருக்கு "பந்தோபஸ்த்து பணி" மற்றும் "லாங் எஸ்கார்ட்" அனுப்புவதில்லை.

  இது மட்டுமின்றி சாதி பிரச்சனை இங்கு அதிகம் உள்ளது. வேலூர் ஆயுதப்படையில் உள்ள இரண்டு ரைட்டர்கள் தான் இதற்கு காரணம். அதன் காரணமாகவே பணியாளர்கள் பணி அலுவலர்கள் மொத்தமும் அவர்கள் உள்ளனர்.

  அதே போல் டிபிஓ உள்ளதாகவும், மாவட்ட காவல் அலுவலரின் ஓட்டுநர் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பல காரியங்களை சாதிப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  அதன் மீது விசாரித்து அதில் உண்மையிருப்பின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்ட காவல்துறையில்  பணிபுரியும் அனைத்து காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தங்களுடைய குறைகள் மற்றும் வேண்டுகோள்களை நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரியப்படுத்த வேண்டுமே தவிர காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் சமூக வலைத்தளத்தில் தங்கள் குறைகளையும் சக காவலர்களின் மீதான ஆதாரமற்ற  குற்றச்சாட்டுகளை பரப்புதல் கூடாது. 

இனிவரும் காலங்களில் இவ்வாறு காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களை தவறாக தங்களின் சுய லாபத்திற்காகவும் மற்றும் சக காவலர்களின் மரியாதைக்கும்,மதிப்பிற்கும் களங்கம் விளைவிப்பவர்கள் யார் என கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் துறை  சார்பாக தெரிவிக்கப்படுவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.