ஆயுட்காலம் முழுவதும் தவறாமல் வாக்களியுங்கள்? வேலூர் ஆட்சியர் அறிவுரை! திருப்பத்தூரிலும் நிகழ்ச்சி!

ஆயுட்காலம் முழுவதும் தவறாமல் வாக்களியுங்கள்? வேலூர் ஆட்சியர் அறிவுரை! திருப்பத்தூரிலும் நிகழ்ச்சி!

 கு.அசோக்,

  இளம் வாக்காளர்கள் தான் நல்ல அரசு அமைய தொடர்ந்து வாக்காளிக்க வேண்டும் - வாக்காளர் தின விழாவில் உறுதிமொழியை ஏற்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு.

 வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் அரங்கில் தேசிய வாக்காளர் தின விழா மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தமிழ் மொழி சார்ந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்வு நடந்தது

   பரிசுகளை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.

¢ மேலும் 90 வயது முதல் 80 வயதிற்கும் மேற்பட்ட மூத்த வாக்காளர்களுக்கு ஆட்சியர் சால்வை அணிவித்து கௌரவித்ததுடன் இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையையும் வழங்கினார்

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்

   பின்னர் விழாவில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில், நம்முடைய தேசத்தை சிறந்த தேசமாக மாற்ற நமக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது நாம் நமது வாக்குரிமையை வைத்து சமூக நீதி பொருளாதார நீதி அரசியல் நீதி ஆகியவற்றை நிலை நாட்டை இந்தியா ஜனநாயக நாடு என்பதை உலகிற்கு பறைசாற்ற வேண்டும்.

   இளைஞர்கள் தொடர்ந்து ஆயுள் காலம் முழுவதும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.

திருப்பத்தூர் மாவட்டம்!

 திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை அனைத்து துறை அதிகாரிகளும் எடுத்துக் கொண்டனர்

  திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனா.¢  அதுமட்டுமின்றி வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து பலகையில் அனைத்து துறை அதிகாரிகளும் கையெழுத்திட்டனர்.

மேலும் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய 7 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள் முன்னதாக வாக்காளர் அட்டையை வாங்கி கடந்த தேர்தலில் தங்களது  வாக்கினை செலுத்தியதின் காரணமாக 3 பேருக்கு  பாராட்டும் வண்ணம் சான்றிதழும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.