இறந்த செல்ல நாயை மனிதர்களைபோல் அடக்கம் செய்த நபர்!

இறந்த செல்ல நாயை மனிதர்களைபோல் அடக்கம் செய்த நபர்!

கே.முரளி

  11 ஆண்டுகளாக செல்லமாக வளர்த்த நாய் இறந்துவிட அதை பயபக்தியோடு அடக்கம் செய்திருக்கிறார் ஒரு நபர்.   திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.கேட்டை, காந்தி தெருவைச் சேர்ந்தவர் குமரன். இவர் கடந்த 11 ஆண்டுகளாக ஜானி என்கிற நாயை செல்லபிராணியாக வளர்த்து வந்தார். இந்நிலையில் அந்த நாய் இறந்துவிட, கண்கலங்கிய அதனுடைய எஜமான் அதை தூக்கி வீசிவிடாமல், மனிதர்களின் சடலத்துக்கு அளிக்கும் மரியாதையைப் போலவே பூ பொட்டெல்லாம் இட்டு சடங்குகளை செய்து அடக்கம் செய்தார்.

  தான் வளர்த்த செல்லபிராணிக்காக நன்றி யோடு இறுதி அஞ்சலி செலுத்திய குமரனை பலரும் பாராட்டினர்