மருத்துவர்கள் சரியாக பணிக்கு வருகின்றனாரா! ஆட்சியர் ஆய்வு!!

கு.அசோக்,
பொன்னை மேம்பால பணிகள் மற்றும் பொன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கொல்லப்பள்ளி குளம் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்
வேலூர்மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள பொன்னை உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் இப்பணிகளானது தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
உடன் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். இதன் பின்னர் பொன்னை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சரியாக பணிக்கு வருகின்றனர் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றதா எனவும் மக்களிடம் கேட்டறிந்தார்.
இதன் பின்னர் கொல்லப்பள்ளியில் ஊராட்சியில் சுமார் 8 லட்சம் மதிப்பிலான குளம் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வள்ளிமலை அரசினர் மேல்நிலைப்பள்ளியிலும் ஆட்சியர் மாணவர்களின் வகுப்பறைக்கு சென்று பார்வையிட்டு நடத்தப்படும் பாடங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.