புத்தகத் திருவிழா என்பது ஒரு விருந்து! திருப்பத்தூர் டி.ஆர்.ஓ. வளர்மதி பேச்சு!

புத்தகத் திருவிழா என்பது ஒரு விருந்து! திருப்பத்தூர் டி.ஆர்.ஓ. வளர்மதி பேச்சு!

ஆர்.ரமேஷ்,

 திருப்பத்தூர்  தூயநெஞ்சக் கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் பொது நூலகத்துறை இணைந்து நடத்தும் மூன்றாவது  புத்தகக் திருவிழாவை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி அவர்கள், ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.

 முன்னிலை உரையாக மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி அவர்கள்  தெரிவித்ததாவது:-

 கல்வி என்பது நம் அனைவருக்கும் முக்கியமானது.  அந்த கல்வியை பல்வேறு வடிவங்களில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம், அதில் இப்புத்தக திருவிழாவும் ஒன்று. இப்புத்தகத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவதற்கு முக்கிய காரணம், ஒருங்கிணைந்த புத்தகம் கிடைப்பது இப்புத்தகத் திருவிழாவாகத்தான் இருக்கும்.

 புத்தகத் திருவிழா என்பது ஒரு விருந்து, விருந்தில் நாம் அனைத்து விதமான உணவுகளை சாப்பிடுகின்றோமோ அதைப்போல் இப்புத்தகத் திருவிழாவில் பல்வேறு வகையான புத்தகங்களும் இடம்பெற்றிருக்கும்.  அதிக புத்தகங்களை படிக்கின்ற பொழுது அதிகமாக கல்வி கற்கின்ற நிலை மற்றும் பல்வேறு விஷயங்கள் அறிந்து கொள்ள நேரிடும்.

  நம் தாத்தா பாட்டி பழைய கால கதைகள் குழந்தைகளுக்கு சொல்வார்கள், ஆனால் அந்தக் கதைகளை தற்போது சொல்வதற்கு கூட்டுகுடும்பங்கள் கிடையாது, அதனால் இப்புத்தகத் திருவிழாவின் வாயிலாக கலாச்சாரம், சமையல், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் போன்ற பல்வேறு விதமான புத்தகங்களை நூலகம் என்று சொல்லலாம்.

  அதை நாம் கற்கின்ற பொழுது கல்வி வளர்ச்சி அடையும், மேலும் நமது நாகரிகம் கலாச்சாரம் ஆகியவை வளர்ச்சி அடையும்.

 அதனால் இப்புத்தகத் திருவிழாவுக்கு ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளை அழைத்து வர வேண்டும், இதன் மூலம் அனைத்தும் அவர்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு நேரிடும், மேலும் அறிவு சார்ந்த விஷயங்களும் தெரிந்து கொள்ள முடியும்.

  மேலும் இப்புத்தகத் திருவிழாவில் பல ஆளுமைகள் சொற்பொழிவு ஆற்ற இருக்கிறார்கள், அவர்கள் பேசுகின்ற பொழுது பாரம்பரிய நடைமுறைகள், கல்வி, பெண்களின் வளர்ச்சி, போன்ற பல்வேறு விஷயங்கள் அவர்கள் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

  முன்னொரு காலங்களில் பெண்கள் எங்கேயும் வெளியில் செல்லாமல் இருந்தோம், ஆனால் தற்பொழுது அனைத்து விதத்திலும் முன்னேற்றமாக இருக்கின்றோம். அதைப்போலவே இப்ப புத்தகங்களையும் கற்றுக்கொண்டு, நம்முடைய சுற்றத்தார், பெரியோர்கள், மற்றும் மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக இருந்து, இந்த  புத்தகங்களை கற்று அவர்களுக்கும் நாம் தெளிவு படுத்த வேண்டும், மேலும் நம் வீட்டில் உள்ள அக்கா தங்கை அனைவருக்கும் எடுத்துரைக்க வேண்டும். இந்த மரபுகள் சார்ந்த புத்தகங்களை படிக்கின்ற பொழுது நாம் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். அதனால் இப்புத்தகத் திருவிழா நமது அறிவு கண்களை திறப்பது போல் இருக்கின்றது என்றார்..

   விழா நிகழ்வின் தொடர்ச்சியாக பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் மற்றும் சிறப்பு சொற்பொழிவாளர் திரு.சுந்தர ஆவுடையப்பன் அவர்களின் சொற்பொழிவு மேற்கொள்ளப்பட்டது.

    இப்புத்தக திருவிழாவில் நகர்மன்றத் தலைவர் திருமதி.சங்கீதா வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர்.உமாமகேஸ்வரி, ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் திருமதி.சத்யா சதீஷ்குமார்உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.