ஆவினில் முன்னாள் அமைச்சர் வீரமணியின் ஆவணங்களா?

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் ஆய்வு பழைய முறைகேடுகள் தொடர்பாகவும் மேலும் முன்னாள் அமைச்சர் வீரமணியின் ஆவணங்கள் எதாவது அங்கு வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் அலுவலகமும் குளிரூட்டும் நிலையமும் உள்ளது. இதற்கு தலைவராக த.வேலழகன் உள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு நெருக்கமானவர் ஆவார்.
இந்நிலையில் அங்கு, வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் குழுவினருடன் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் வீரமணியின் ஆவணங்கள் எதாவது ஆவின் தலைவர் வேலழகனின் அறையில் இருக்குமா என்ற கோணத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதாக உறுதிபடுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே வேலூர் ஆவினில் பொது மேலாளராக இருந்த ஒருவர் பல லட்சம் மோசடி செய்ததால் அவர் பணியிடமாற்றம் செய்யபட்ட நிலையில் அந்த ஆவணங்கள் எதாவது சிக்குமா என சோதனையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆவின் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் திடீர் ஆய்வால் நிறுவனத்தினுள் பரபரப்பு காணப்படுகிறது
கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இங்கு இதே போன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த சோதனையால் ஆவின் நுழைவாயில் கேட்டுகள் மூடப்பட்டன.
குறிப்பு:- வேலூர் ஆவின் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் இன்றளவுக்கும் தொடர்கிறது. இதை சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கவனித்தால் நலம்.