எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்ற அதிமுகவினர் இடையே அடிதடி!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
உள்ளாட்சி தேர்தல் பரப்புரைக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்ற அதிமுகவினர் இடையே அடிதடி, கைகலப்பு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ளாட்சிதேர்தல் பரப்புரைக்கு சென்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சாத்தூர் வெங்கடசலாபுரம் அருகே சாத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் தொண்டர்களுடன் வரவேற்பு அளித்தனர்.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி சென்ற காரின் பின்னால் பல வாகனங்கள் அணி வகுத்தன.
அதில் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பின் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது வண்டிகளை முந்திச் செல்வதில் தகறாறு ஏற்பட்டது.
இதனையடுத்து ராஜவர்மனின் ஆதரவாளர்களுக்கும் , கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனின் ஆதரவாளர்களுக்கும் உட்கட்சி பூசல் காரணமாக அடிதடி நடந்தது.
பின்பு காவல்துறையினர் பிரச்சினை ஈடுபட்டவர்களை தடுத்து அனுப்பி வைத்தனர்.
இதை பார்த்த பொது மக்கள் சிரிப்பாய் சிரித்தனர்.