திடீரென்று பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்த முதலமைச்சர்!மாணவர்கள் குஷி!!

திடீரென்று பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்த முதலமைச்சர்!மாணவர்கள் குஷி!!

 ஜி.எஸ்.மேத்யூராஜ்,

  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம் - கடப்பாக்கம் அரசு மேனிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினார், இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிவிட்டனர்.

 இன்று காலை மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து மரக்காணத்துக்கு காரில் புறப்பட்டார். இன்று மதியம் மரக்காணம் அருகே கடபாக்கத்துக்கு வந்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தைத் துவக்கி வைக்க செல்லும் வழியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

 பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் மதிய உணவையும் ஆய்வு செய்தார். அதன் பின்னர் அங்கிருந்து காரில் மரக்காணம் முதலியார் குப்பத்துக்கு புறப்பட்டு சென்றார். 

 பின்னர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியார் குப்பத்தில் இன்று மாலை இல்லம் தேடி கல்வி திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வத்தார்.

 முன்னதாக, மரக்காணம் பஸ் நிறுத்தம் அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், எம்.பி.க்கள் பொன் கவுதமசிகாமணி, ரவிக்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.