அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்திய அனைக்கட்டு எம்.எல்.ஏ.!

கு.அசோக்,
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் திடீர் ஆய்வு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
வேலூர் அடுக்கம்பாறையில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனையில் பொதுமக்களுக்கு குடிநீரில்லை என செய்திகள் வந்த நிலையில். அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் திடீரென மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று மக்களுக்கு குடிநீர் கிடைக்கிறதா என ஆய்வு செய்தார்.
அதே போல் நோயாளிகளுக்கு மாத்திரைகள் வழங்கும் இடத்தில் உள்ள குறைகளை கேட்டறிந்தார்.
மேலும், அரசு மருத்துவமனையை நாடி வரும் ஏழை எளிய மக்கள் தங்கு தடையின்றி அவர்கள் மருத்துவ வசதியை பெறவும் அடிப்படை வசதிகளான கழிவறை குடிநீர் தங்கும் பகுதிகளில் இ.சி.ஜி எக்ஸ்ரே போன்றவைகள் உள்ளதா என ஆய்வு செய்தார். அப்போது மருத்துவ கல்லூரி அதிகாரிகளும் உடன் சென்றனர்.
இந்த திடீர் ஆய்வின் போது கண்டறியப்பட்ட சில குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய அறிவுறுத்தினார்.
சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமாரின் திடீர் ஆய்வு அதிகாரிகளின் மத்தியில் பரபரப்பைரேற்படுத்தியது.