திட்டும் வாங்கினார்! சட்டத்திலும் சிக்கினார்!  எடப்பாடி பழனிசாமி மீது 7 பிரிவுகளில் வழக்கு!

https://youtube.com/shorts/h87DB-tjppc 

ம.பா.கெஜராஜ்,

திட்டு வாங்கி கட்டிக்கொண்டதுடன் சட்டத்திலும் சிக்கினார் எடப்பாடி பழனிசாமி, ஆம் அவர் மீது மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

  எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரைக்கு சென்றார். விமான நிலையத்தில் இருந்து பயணிகளை வெளியில் அழைத்துச்செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ்சில் நின்றபடியே சக பயணிகளுடன் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்தார்.

   அப்போது பஸ்சில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் திடீரென எடப்பாடி பழனிசாமியை வீடியோ எடுத்தபடியே பேசினார். 'எதிர்க்கட்சி தலைவர் துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் நான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். சின்னம்மாவுக்கு துரோகம் செய்தவர்.துரோகத்தின் அடையாளம்.

   10.5 சதவீத இடஒதுக்கீட்டை தென்நாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர் என்று சவுண்டு விட்டார்.

  இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர் வீடியோ எடுக்கப்பட்ட செல்போனை தட்டி பறித்தார். இதுதொடர்பான வீடியோ உடனடியாக சமூக வலைதளங்களில் பரவியது. எடப்பாடி பழனிசாமியின் நேருக்கு நேராக அவரை பற்றி அவதூறாக பேசிய நபர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பதும், இவர் அ.ம.மு.க. பிரமுகர் என்பதும் தெரிய வந்தது. இதன் பின்னர் பஸ்சில் இருந்து இறங்கி எடப்பாடி பழனிசாமி வெளியில் வந்தார். அப்போது ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர் ராஜேஸ்வரன் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

  ஆகவே விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது. எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக அ.ம.மு.க. பிரமுகர் ராஜேந்திரன் மீது அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ராஜேஸ்வரனும் தனியாக புகார் அளித்தார். அதில், 'எடப்பாடி பழனிசாமியுடன் வந்திருந்த அ.தி.மு.க.வினர் தன்னை தாக்கி செல்போனை பறித்துக்கொண்டதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது புகாரில் தெரிவித்தார்.

 அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 5 அ.தி.மு.க.வினர் மீது  393 ஐ.பி.சி. (செல்போனை பறித்தல்), 506-2 (கொலை மிரட்டல்), 328 (தாக்குதல்) , 294.பி (அவதூறாக பேசுதல்) என்பது உள்பட 7 பிரிவுகளின் கீழ் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

  அதே போல் ராஜேஸ்வரன் மீது 2 பிரிவில் வழக்கு போட்டுள்ளனர்.