விடுவிக்க கோரிய வேலுமணி மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம்!

விடுவிக்க கோரிய வேலுமணி மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம்!

  ஜி.சாந்தகுமார்,

  சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக வழக்குகள் பதிய நீதிமன்றத்தை சிலர் நாடினர்.

  அவர்களில்  அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.

  ஆம்,  அவர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  அதன்பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை, எஸ்.பி வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது.

  மேலும் அதேபோல் வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்த வழக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்திருந்தனர்.

  மேற்படி இரண்டு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவு செய்ய தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

   அப்போது எஸ்.பி வேலுமணி சார்பில், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜரானார்.

 அப்போது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து ஜூலை 18'க்குள் பதிலளிக்க அறப்போர் இயக்கம் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுவரை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என எஸ்.பி வேலுமணியின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.