அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்த அரசு பணி புகைப்படங்கள்!செய்தித் துறை ஏற்பாடு!!

ம.பா.கெஜராஜ்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுத்துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவா;கள் (28.03.2022) அன்று திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.
திருப்பத்தூர்மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுத்துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவா;கள் (28.03.2022) அன்று திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்5 அலுவலகம் மூலம் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர; அவர்களின் புகைப்படங்கள் மற்றும் நீர்வள துறை அமைச்சர்,பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுத்துறைமுகங்கள் துறை அமைச்சர், ஊரக வளா;ச்சி துறை அமைச்சர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்ராகியோரின்அவர்களின் புகைப்படங்கள் பல்வேறு துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள், புதிய திட்டங்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.
இப்புகைப்படக் கண்காட்சியினை மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பாவையிட்டனர்
ரூ.6.98 கோடி மதிப்பீட்டில் நவீன சுற்றுலா மாளிகை!திருப்பத்தூர் ஆட்சியர் அடிக்கல் நாட்டினார்!!
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், பொதுப்பணித்துறை வளாகத்தில் பொதுப்பணித் துறையின் சார்பில் ரூ.6.98 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மாளிகை புதிய கட்டடம் கட்டும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.க.தேவராஜி, திருப்பதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.நல்லதம்பி, முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்ச்சில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி பொதுப்பணித்துறை வளாகத்தில் பொதுப்பணித் துறையின் சார்பில் தரை தளம் 968 சதுர மீட்டர் முதல் தளம் 968 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.6.98 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மாளிகை புதிய கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தரை தளத்தில் விஐபி அறை 4 எண்ணிக்கை, சாதாரண அறை 4 எண்ணிக்கை, அலுவலக வரவேற்பு, சமையல் அறை, உணவு உண்ணும் அறை அமைய உள்ளது.
மேலும் முதல் தளத்தில் விஐபி அறை 1 எண்ணிக்கை (உணவு உண்ணும் அறை உடன்), விஐபி அறை 3 எண்ணிக்கை, சாதாரண அறை 3 எண்ணிக்கை, கலந்தாய்வு அறை 1 எண்ணிக்கை அமைய உள்ளது போன்ற வசதிகள் அமைக்கப்பட உள்ளது.
இப்பணி ஏழு மாத காலத்திற்குள் நிறைவடைந்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இக் கட்டடம் கட்டும் பணியினை ஈரோடு மாவட்டத்தை சேர;ந்த ஜி.எம்.எஸ் எலகண்ட் பில்டா;ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தலைவர் திரு.எஸ்.இராஜேந்திரன், திருப்பத்தூர் நகர்மன்ற தலைவர் திருமதி.க.சங்கீதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.சங்கரலிங்கம், திருப்பத்தூர் நகர்மன்ற துணை தலைவர் திரு.சபிவுல்லா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திரு.தேவன், உதவி செயற்பொறியாளர் திரு.ரவி, உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்
வெளியீடு:செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.