இந்திய ரூபாய் நோட்டு 2,000//- ன் தோற்றமும், மறைவும்!

ம.பா.கெஜராஜ்,
இந்திய ரூபாய் நோட்டு 2,000//- ன் தோற்றமும், மறைவும் அரசியலை மையப்படுத்தி பேசப்படுகிறது.
இந்நிலையில் அது குறித்து சற்று டீடெய்லாக பார்ப்போம், "முழுவதையும் வாசிக்கவும்".
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 10- ம் தேதி நாடு முழுவதும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது 336 கோடி ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. நாட்டில், பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் போது ரூ. 2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அப்படி இந்த ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்ட 7 ஆண்டுகளில் திரும்ப பெறப்படுகிறது. இந்த நோட்டுகள் ஏன் திரும்ப பெறப்படுகின்றன.
2018ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி நிலவரப்படி 336 கோடி எண்ணிக்கையிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தின் இருந்தன. 2018ம் ஆண்டுக்கு பிறகு ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது முழுவதுமாக முழுமையாக நிறுத்தப்பட்டன. இதனால் 2021ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி வரை 249 கோடி எண்ணிக்கையிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
2016-17ம் நிதியாண்டில் 354 கோடி எண்ணிக்கையிலான ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன.
2017-18ம் நிதியாண்டில் 11 கோடி எண்ணிக்கையிலான ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன.
2018-19ம் நிதியாண்டில் 4.6 கோடி எண்ணிக்கையிலான ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன.
அப்படியிருக்கையில், 2019 -2020, 2020-21, 2021-22, 2022-23 ஆகிய நான்கு நிதியாண்டுகளாக ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் அச்சடிக்கப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 10.8 சதவிகிதம் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.
இந்த சூழலில் தான் ரிசர்வ் வங்கி வரும் செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு ரூ.2000 செல்லாது என்றும், கையில் ரூ.2000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அதை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
தங்கத்தை தேடி மக்கள்,
மேற்படி 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள நகைக்கடைக்காரர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதற்கு ஆலோசனை கேட்டு அதிகளவில் அழைப்பு வருவதாக அகில இந்திய ஜெம் மற்றும் ஜூவல்லரி உள்நாட்டு கவுன்சில் தலைவர் சயாம் மெஹ்ரா தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறாது.
கூட்டுறவு வங்கிகளில் மாற்றலாமா - அமைச்சர் பெரிய கருப்பன்.
இது ஒருபுறம் இருக்க, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2000 ரூபாய் நோட்டுகளில் கூட்டுறவு வங்கிகள் மட்டும் தான் வேலை செய்ய வேண்டுமா? எல்லா வங்கிகளுக்கும் என்ன சட்டங்கள் பொருந்துமோ, அது கூட்டுறவு வங்கிக்கும் பொருந்தும்.
வாங்குவது, கொடுப்பது என்பது எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அது அவர்கள் அளித்த காலக்கெடுவிற்குள் நடக்க வேண்டும்.
அதை ரேஷன் கடையில் வாங்கக் கூடாது. மெடிக்கல் ஷாப்பில் வாங்கக் கூடாது. மளிகைக் கடையில் வாங்கக் கூடாது என எந்த தடையும் இல்லை. வங்கிகளில் போடலாம். டெபாசிட் செய்யலாம். பயன்படுத்தக் கூடாது என்ற தடைகள் எதுவும் இல்லை. அந்த காலக்கெடுவிற்கு பின்னர் தான், அதற்கு மதிப்பு இருக்காது என்பதே ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு என்றார்.